நாளை முதல் எஸ்எஸ்எல்சி துணை தேர்வுகள்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் தோல்வி அடைந்த மாணவ, மாணவியருக்கானசிறப்பு துணைத் தேர்வு 6ம் தேதி தொடங்குகிறது.
இதுகுறித்து அரசு தேர்வுகள் துறை இயக்குனர் ஜெகன்னாதன் கூறுகையில், கடந்தமார்ச் மாதம் நடந்த பத்தாவது வகுப்பு பொதுத் தேர்வை மொத்தம் 8.14 லட்சம் பேர்எழுதினர். ஓ.எஸ்.எல்.சி தேர்வை 1,293 பேர் எழுதினர்.இத் தேர்வுகளில் தேர்ச்சி பெறாதவர்களுக்கு துணைத் தேர்வு நடத்தப்படுகிறது. இத்தேர்வு 6ம் தேதி தொடங்கி 15ம் தேதி வரை நடைபெறும். மொத்தம் 2 லட்சத்து 18ஆயிரத்து 88 மாணவ, மாணவியர் தேர்வு எழுதவுள்ளனர்.
மெட்ரிகுலேஷன் மற்றும் ஆங்கிலோ இந்தியன் மாணவர்களுக்கான சிறப்புத் துணைத்தேர்வு 4ம் தேதி தொடங்கி 14ம் தேதி வரை நடைபெறுகிறது.
மெட்ரிகுலேஷன் சிறப்புத் துணைத் தேர்தவில் 10,400 பேரும், ஆங்கிலோ இந்தியன்தேர்வை 280 பேரும் எழுதுகின்றனர். மொத்தம் 250 மையங்கள் தேர்வுக்காகஅமைக்கப்பட்டுள்ளன என்றார்.












Click it and Unblock the Notifications