மதுபான கடைகளை மூடக் கோரி வழக்கு
சென்னை:
தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் மதுக் கடைகளை மூட தமிழக அரசுக்குஉத்தரவிடக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
திண்டிவனத்தைச் சேர்ந்த ஞானசேகரன் என்பவர் இதுதொடர்பாக உயர்நீதிமன்றத்தில்தாக்கல் செய்த பொது நலன் மனுவில், மது குடிப்பது உடல் நலக்கேடு, நாட்டுக்குக்கேடு, சட்டப்படி அது குற்றம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.திரைப்படங்களில் மது குடிப்பது, புகைபிடிப்பது போன்ற காட்சிகள் தடைசெய்யப்பட்டுளளது.
இந்த நிலையில் தமிழகத்தில் அரசே மதுபானக் கடைகளை நடத்தி வருகிறது.
உடல் நலத்திற்குப் பாதிப்பை ஏற்படுத்தும் மதுவை அரசே விற்பது சரியல்ல,முறையல்ல. இதை கைவிடக் கோரி கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தமிழகஅரசுக்குக் கடிதம் அனுப்பினேன். இதுவரை அதற்குப் பதில் இல்லை.
எனவே தமிழக அரசு நடத்தி வரும் டாஸ்மாக் கடகைளை மூட அரசுக்கு உத்தரவிடவேண்டும். மேலும் பெருகி வரும் கள்ளச் சாராய சாவுகளைத் தடுக்க காவல்துறைதீவிரமாக செயல்படவும் உயர்நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்றுகோரியிருந்தார்.
இம்மனுவை விசாரித்த தலைமை நீதிபதி ஏ.பி.ஷா, நீதிபதி முருகேசன் ஆகியோர்அடங்கிய டிவிஷன் பெஞ்ச், இதுதொடர்பாக பதில் மனு தாக்கல் செய்யும்படி தமிழகஅரசின் மது விலக்கு தீர்வைத் துறை ஆணையருக்கு நோட்டீஸ் அனுப்பஉத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications