கேப்டனுடன் இணைகிறார் கு.ப.கி!
திருச்சி:
தமிழர் பூமி கட்சியைக் கலைத்து விட்டு விஜயகாந்த்தின் தேமுதிகவில் இணையஅதிமுக முன்னாள் அமைச்சர் கு.ப.கிருஷ்ணன் முடிவு செய்துள்ளார்.
கடந்த 1991ம் ஆண்டு தல் 1996 வரை இருந்த ஜெயலலிதா அமைச்சரவையில் இடம்பெற்றவர் கு.ப.கிருஷ்ணன். அதிமுக அடுத்த தேர்தலில் ஆட்சியை இழந்த பின்னர்கு.ப.கிருஷ்ணன் அதிமுகவிலிருந்து விலகி தமிழர் பூமி என்ற கட்சியை ஆரம்பித்தார்.முத்தரையர் சமூகத்தைச் சேர்ந்த கு.பா.கிருஷ்ணன் அச்சமூக வாக்குகளை நம்பி கட்சிஆரம்பித்தார். சட்டசபைத் தேர்தல்களிலும் போட்டியிட்டுப் பார்த்தார். எதுவும்தேறவில்லை.
இந் நிலையில் தனது கட்சியைக் கலைத்து விட்டு விஜயகாந்த் கட்சியில் இணையகு.ப.கிருஷ்ணன் முடிவு செய்துள்ளார்.
தற்போது திருச்சி ஸ்ரீரங்கத்தில் தர்மபுரி பட ஷூட்டிங்குக்காக முகாமிட்டுள்ளவிஜயகாந்த்தை, கிருஷ்ணன் சந்தித்துப் பேசியுள்ளார். அப்போது தனது கட்சியைக்கலைப்பது தொடர்பாக அவர் ஆலோசித்ததாகத் தெரிகிறது.
என்னை நானே தெரிஞ்சுகிட்டேன்:
இதற்கிடையே தர்மபுரி படத்தின் சூட்டிங்கில் படு பிஸியாக இருக்கிறார் விஜய்காந்த்.ஸ்ரீரங்கத்தில் படு விறுவிறுப்பாக நடந்து வருகிறது இதன் சூட்டிங்.
அதிரடி இயக்குனர் பேரரசு இயக்கும் இப்படம் அதிரடி அரசியல் பின்னணியில்உருவாகிறது.
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் அருகே பிரமாண்டமான கடை செட் போட்டு அங்குஒரு பாடல் காட்சியை படமாக்கி வருகிறார்கள். நான் யாரு, நானே தெரிஞ்சுகிட்டேன்என்று ஆரம்பிக்கும் பாடலை விஜயகாந்த் பாடுவது போல காட்சியை படமாக்கிவருகிறார் பேரரசு.
தேமுதிக கொடியை கையில் கட்டியபடி இந்தப் பாட்டில் விஜயகாந்த் ஆடுகிறாராம்.கேப்டன் நீண்ட இடைவெளிக்குப் பிறகு நிடிப்பதால், கட்சித் தொண்டர்கள், ரசிகர்கள்என ஸ்ரீரங்கத்தில் கூட்டம் கட்டி மோதுகிறது.












Click it and Unblock the Notifications