உரிமைகளை தட்டி பறிக்க வேண்டும்-வி.பி.சிங்
டெல்லி :
நமது உரிமைகள் கெளரவமான வழியில் நமக்குக் கிடைக்காவிட்டால் அதைத் தட்டிப்பறிக்க வேண்டும் என்று முன்னாள் பிரதமர் வி.பி.சிங் கூறியுள்ளார்.
வி.பி.சிங்கின் 75வது பிறந்த நாள் டெல்லியில் கொண்டாடப்பட்டது. இதையொட்டிஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியில் அவர் பேசுகையில்,அரசியல் அரங்கில் ஏழைகளும், நலிவடைந்த பிரிவினரும் கை கோர்த்து மாபெரும்சக்தியாக மாறும் காலம் வந்து விட்டது.
நமது உரிமைகளை முறையாகப் பெற பாடுபட வேண்டும்.
உரிமைகளைப் பெற அமைதி வழியில் முயற்சித்தும் அது கிடைக்காத பட்சத்தில்அதைத் தட்டிப் பறிக்க மக்கள் தயங்கக் கூடாது. சில நேரங்களில், இப்போது உள்ளஅமைப்புகளை எதிர்த்து போராட வேண்டும் போல என எனக்குத் தோன்றுகிறது.ஆனால் எனது வயதும் உடல் நிலையும் அதற்கு உடன்பட மறுக்கிறது.
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் ஏழைகளின் நிலைமை மிகவும் மோசமாகஉள்ளது. அவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து மாபெரும் சக்தியாக அரசியல்அரங்கில் உருவெடுக்கும் காலம் வந்து விட்டது. இதுதான் சரியான நேரம்.
பல அரசியல் கட்சிகள் அரசமைப்பதற்காகத்தான் தங்களது நேரங்களைசெலவிடுகின்றன. அரசுகள் வரலாம், போகலாம். ஆனால் நமது இப்போதையதேவை, அரசு அமைப்பது அல்ல, மாறாக வலிமையான நாட்டை உருவாக்குவதுதான்.
மதவாத சக்திகளின் துணை கொண்ட கட்சிகளை மக்கள் புறக்கணிக்க வேண்டும்என்றார் வி.பி.சிங்.
வி.பி.சிங் உருவாக்கியுள்ள ஜன் மோர்ச்சா கட்சியின் தலைவரான ராஜ்பாபர், நீதிக்கட்சியின் தலைவர் உதித் ராஜ் ஆகியோரும் இந்த நிகழ்ச்சியில் பேசினர்.












Click it and Unblock the Notifications