வித்யாவை விடுவிக்காவிட்டால்...சிறை அதிகாரிக்கு மிரட்டல் கடிதம்!
மூணாறு:
மூணாறு தேனிலவுக் கொலையில் கணவரைக் கொன்றதாக கைது செய்யப்பட்டுசிறையில் அடைக்கப்பட்டுள்ள வித்யாவை விடுதலை செய்யாவிட்டால் தேவிகுளம்கிளைச் சிறைக்கு வெடிகுண்டு வைத்துத் தகர்க்கப் போவதாக சிறைகண்காணிப்பாளருக்கு மிரட்டல் கடிதம் வந்துள்ளது.
![]() |
இந் நிலையில் தேவிகுளம் சிறை கண்காணிப்பாளருக்கு ஒரு கடிதம் வந்துள்ளது.அதில், 30ம் தேதிக்குள் வித்யாவை விடுவிக்க வேண்டும். இல்லாவிட்டால்சிறையைக் குண்டு வைத்துத் தகர்த்து வித்யாவை விடுவிப்போம் என்றுகூறப்படடுள்ளது.
ஆங்கிலத்தில் எழுதப்பட்டுள்ள அக்கடிதம் குறித்து கண்காணிப்பாளர் திணேஷ், கேரளடிஜிபி ராமனுக்கு அனுப்பி வைத்தார். டிஜிபியின் உத்தரவின் பேரில் சிறைக்கு கூடுதல்பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளது.
வித்யா இருக்கும் அறைக்கும் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மிரட்டல்கடிதம் அனுப்பியது யார் என்பது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.













Click it and Unblock the Notifications