மும்பை குண்டுவெடிப்புகள் - ஒரு பிளாஷ்பேக்!
மும்பை:
மும்பையில் குண்டுவெடிப்புச் சம்பவங்கள் புதிதல்ல. தொடர்பான செய்திகள்பு பலமுறைகுண்டவெடிப்புத் தாக்குதலில் சிக்கி மும்பை ரத்தம் சிந்தியுள்ளது.
![]() |
ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். ஆர்.டி.எக்ஸ். ரகவெடிகுண்டுகள் பெரிய அளவில் பயன்படுத்தப்பட்டது இதுதான் முதல் முறை.இந்தத் தாக்குதலைத் திட்டமிட்டவன் தாவூத் இப்ராகிம்.
இதையடுத்து கடந்த 2002ம் ஆண்டு டிசம்பர் 2ம் தேதி மும்பை காட்கோபர் ரயில்நிலைய வாசலில் சக்தி வாய்ந்த குண்டு வெடித்தது.
பேருந்துக்குள் வெடித்த இந்த குண்டு 2 பேரை காவு வாங்கியது. 20க்கும்மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக 6 பேரைபோலீஸார் கைது செய்தனர்.
![]() |
2003ம் ஆண்டு ஜனவரி 27ம் தேதி விலிபார்லே ரயில் நிலையம் முன்பு சைக்கிளில்வைக்கப்பட்டிருந்த குண்டு வெடித்தது. இதில் 30 பேர் காயமடைந்தனர்.அதிர்ஷ்டவசமாக பெரும் உயிர்ச் சேதம் தவிர்க்கப்பட்டது.
அதே ஆண்டு மார்ச் 13ம் தேதி லாத் ரயில் நிலையத்தில், புறநகர் ரயில் ஒன்றில் சக்திவாய்ந்த குண்டு வெடித்தது. இதில் 11 பேர் பலியாயினர். 50க்கும் மேற்பட்டோர்காயமடைந்தனர்.
![]() |
இதைத் தொடர்ந்து நேற்று நடந்த பயங்கர சங்கிலிக் குண்டு வெடிப்பில் 174 உயிர்கள்பலியாகியுள்ளன.















Click it and Unblock the Notifications