இந்திய எம்.பிக்களின் பாக். பயணம் ரத்து
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
மும்பை குண்டுவெடிப்புச் சம்பவத்தைத் தொடர்ந்து பாகிஸ்தான் செல்லவிருந்தஇந்திய எம்.பிக்கள் குழுவின் பயணம் ரத்து செய்யப்பட்டு விட்டது.
பாகிஸ்தானில் காமன்வெல்த் நாடுகளின் நாடாளுமன்ற குழு கூட்டம்நடைபெறவுள்ளது. இதில் இந்தியா சார்பில் மார்க்சிஸ்ட் எம்.பி. பிருந்தா காரத்,காங்கிரஸ் எம்.பி. சந்தீப் தீக்ஷித் ஆகியோர் அடங்கிய குழு செல்வதாக இருந்தது.ஆனால் மும்பை குண்டுவெடிப்புச் சம்பவத்தைத் தொடர்ந்து இந்தியக் குழுவின்பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது. மும்பைச் சம்பவத்தில் பாகிஸ்தானின் பெயர்அடிபடும் நிலையில் இப்போது அங்கு செல்வது சரியாக இருக்காது என்பதால்இப்பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக பிருந்தா காரத் தெரிவித்துள்ளார்.
இன்று பிற்பகல் அவர்கள் இஸ்லாமாபாத் கிளம்புவதாக இருந்தது. நாளை இக்கூட்டம்இஸ்லாமாபாத்தில் தொடங்குகிறது.












Click it and Unblock the Notifications