பெண்ணுக்கு செக்ஸ் டார்ச்சர்: அதிகாரி கைது
ஸ்ரீபெரும்புதூர்:
இளம்பெண்ணுக்கு செக்ஸ் தொந்தரவு கொடுத்ததுடன், கொலை மிரட்டல் விடுத்ததனியார் நிறுவன அதிகார் கைது செய்யப்பட்டார்.
நாமக்கலை சேர்ந்த எம்சிஏ பட்டதாரி புவனேஸ்வரி (24). இவர் ஸ்ரீபெரும்புதூர்இருங்காட்டுக்கோட்டையில் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்தார்.இவரது துணை மேலாளரான முத்துக்குமார் என்பவர் புவனேஸ்வரியிடம் ஆபாசமாகபேசி செக்ஸ் உறவுக்கு அழைத்துள்ளார். அதிர்ச்சி அடைந்த புவனேஸ்வரி, மேலதிகாரிஎன்ற பயத்தில் அதை வெளியில் சொல்லவில்லை.
இதானல் தொடர்ந்து புவனேஸ்வரியை தொந்தரவு கொடுத்துள்ளார். இந் நிலையில்கடந்த திங்கள்கிழமை, ரூம் போட்டிருக்கிறேன். வந்து விடு இல்லை என்றால்வேலையை விட்டு தூக்கி விடுவேன் என்று கூறியதோடு மறுத்தால் உன்னை கொலைசெய்து விடுவேன் எனவும் புவனேஸ்வரியை மிரட்டியுள்ளார்.
பயந்துபோன புவனேஸ்வரி ஸ்ரீபெரும்புதூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில்புகார் செய்தார். இந்த வழக்கினை பதிவு செய்த போலீசார் முத்துகுமாரை கைதுசெய்தனர். பின்னர் திருவள்ளூர் நீதிமன்றத்தல் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.