For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அழகி ஷோபாவின் சதியில் வீழ்ந்த தந்திரி

By Staff
Google Oneindia Tamil News

திருவனந்தபுரம்:

சபரிமலை தந்திரி விவகாரத்தில் விபச்சாரப் பெண்ணான ஷோபா கைது செய்யப்பட்டு, வீட்டுக் காவலில்வைக்கப்பட்டுள்ளார்.

சபரிமலை தந்திரி மோகனருவுக்கு விபச்சாரப் பெண்களுடன் தொடர்பு இருந்ததை ஒரு கும்பல் படம் பிடித்தது.விபச்சாரப் பெண்கள் நிர்வாண கோலத்தில் இருக்க, அருகே தந்திரி அலங்கோலமான கோலத்தில் சிக்கினார்.

இதையடுத்து தந்திரி பதவி நீக்கம் செய்யப்பட்டார்.

தந்திரியுடன் நிர்வாணமாக இருந்ததாகக் கூறப்படும் விபச்சாரப் பெண்களான சாந்தா, ஷோபா ஆகியோரையும்இதை படம் எடுத்த கூலிப் படையினரையும் போலீசார் விசாரித்தனர். சாந்தா, ஷோபா ஆகியோரின்செல்போன்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

ஷோபாவின் செல்போனில் இருந்து கூலிப் படையினருக்கு அடிக்கடி பேசியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.இதையடுத்து ஷோபாவை வீட்டுக் காவலில் வைத்து போலீசார் விசாரித்தனர். விசாரணையில் பல திடுக்கிடும்தகவல்கள் வெளியாகின.

தந்திரியிடம் பணம் பறிக்கும் நோக்கத்தில் ஷோபாவே இந்தத் திட்டத்தை நிறைவேற்றியுள்ளதாக போலீசார்கூறுகின்றனர்.

சாந்தாவுடன் ஒரே பிளாட்டில் தங்கியிருந்த ஷோபாவுக்கு தந்திரி அடிக்கடி பண உதவி செய்துள்ளார். இந்தநிலையில் ஷோபா பெரிய அளவில் தந்திரியிடம் இருந்து பணம் எதிர்பார்த்துள்ளார். அந்த பணத்தை கொடுக்கதந்திரி மறுத்துள்ளார். அதனால் தந்திரியை மிரட்டி பணம் பறிக்க ஷோபா திட்டமிட்டுள்ளார்.

தந்திரியிடம் இருந்து ரூ.1 கோடி வரை கறந்து விடவேண்டும் என ஷோபா திட்டம் தீட்டி இத் திட்டத்துக்குதிருவனந்தபுரத்தை சேர்ந்த கூலிப்படை தலைவனின் உதவியை ஷோபா நாடியுள்ளார்.

திட்டப்படி சாந்தா, ஷோபாவுடன் நிர்வாண கோலத்தில் இருந்தபோது தந்திரியை அந்தக் கும்பல் படம் பிடித்துவிட்டது. இந்தச் சதியில் சாந்தாவுக்கு தொடர்பில்லை என்று தெரிகிறது.

தந்திரியை நிர்வாண படம் எடுத்து மிரட்டியது தொடர்பாக ஷோபாவை போலீசார் கைது செய்துள்ளனர். இந்தசிக்கலில் இருந்து தப்பிக்க ரூ. 20 லட்சம் வரை தந்திரி பேரம் பேசியுள்ளார். ஆனால், கூலிப் படை (ஷோபாவின்யோசனைப்படி) அதற்கு படியவில்லை.

இப்போது ஷோபா வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளார். ஷோபா திருவனந்தபுரம் கல்லூரியில் படிக்கும் போதுஒரு கட்சியின் இளைஞர் பிரிவில் உதவித் தலைவராக இருந்துள்ளார். அதன் பிறகு கட்சி தலைவராகவும்இருந்துள்ளார். பின்னர் திருமணமாகி கணவரை பிரிந்த பின்னர் கொச்சிக்கு வந்து விபச்சாரத்தில் ஈடுபட்டுவந்துள்ளார் என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X