தஸ்லிமா நஸ்ரீன் விசாவை நீடிக்க இந்தியா மறுப்பு
கொல்கத்தா:
வங்கதேசத்தைச் சேர்ந்த புரட்சிகர பெண் எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரீனுக்கு வழங்கப்பட்ட குடியேற்ற விசாவை புதுப்பிக்கஇந்திய அரசு மறுத்துவிட்டது. அதற்குப் பதில் அவருக்கு 6 மாத சுற்றுலா விசாவை இந்திய அரசு வழங்கியுள்ளது.
![]() |
1993ம் ஆண்டு லஜ்ஜா என்ற நூலை எழுதி பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார் நஸ்ரீன். இந்த நூலுக்கு இஸ்லாமிய அமைப்புகள்நஸ்ரீனை கடுமையாக விமர்சித்தன. அவர் மீது பாத்வா விதிக்கப்பட்டது.
இதையடுத்து தலைமறைவு வாழ்க்கைக்கு தாவினார் நஸ்ரீன். கொல்கத்தாவுக்கு தப்பி வந்தார். அன்று முதல்கொல்கத்தாவில்தான் அவர் வசித்து வருகிறார். இங்கும் கூட அவருக்கு இஸ்லாமிய அடிப்படை வாதிகளால் அவ்வப்போதுமிரட்டல்கள் இருந்து கொண்டே உள்ளன.
குடியேற்ற விசா மூலம் நஸ்ரீன் தொடர்ந்து இந்தியாவில் தங்கியிருக்கிறார். தனக்கு இந்தியக்குடியுரிமை வழங்க வேண்டும்என்று நஸ்ரீன் கோரி வருகிறார். இதுதொடர்பாக அவர் விண்ணப்பம் அளித்திருந்தார். ஆனால் அவருக்கு குடியுரிமை வழங்கமத்திய அரசு மறுத்து விட்டது.
மேலும், அவரது குடியேற்ற விசாவும் புதுப்பிக்கபப்டவில்லை. மாறாக 6 மாத காலம் மட்டுமே இந்தியாவில் தங்கியிருக்கும்சுற்றுலா விசா நஸ்ரீனுக்கு வழங்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து நஸ்ரீன் பெரும் அதிர்ச்சி தெரிவித்துள்ளார். இந்திய அரசு இப்படிச் செய்யும் என நான் எதிர்பார்க்கவில்லை. இதுபெரும் அதிர்ச்சியாக உள்ளது. நான் பிரச்சினையில் சிக்கியபோது இந்தியாதான் எனக்கு அடைக்கலம் கொடுத்தது. இதையும்எனது தாய் நாடாக நான் கருதி வாழ்ந்து வந்தேன். இந்த மண்ணை எனது மண்ணாக மனதளவில் ஏற்றுக் கொண்டு விட்டேன்.ஆனால் இப்போது எல்லாமே தகர்ந்து விட்டது. என்னை ஒருசுற்றுலா பயணி அளவுக்கு சுருக்கி விட்டார்கள். எப்போதுவேண்டுமானாலும் என்னை இந்தியா வெளியேற்றலாம். ஏன் இப்படி சுற்றுலா விசா வழங்கினார்கள் என்பது புரியவில்லை.இதற்குப் பின்னால் உள்ள அரசியல் குறித்து எனக்குத் தெரியாது.
எனது எதிர்காலம் நிலையற்றதாக மாறியுள்ளது. அடுத்து என்ன செய்வது என்று தெரியவில்லை என்றார் 44 வயதாகும் நஸ்ரீன்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி













Click it and Unblock the Notifications