ஆட்சி என்ற தேர்வில் நான் பாஸ்: கருணாநிதி
சென்னை:
நான் தான் திமுக ஆட்சியின் தலைவர் என்ற முறையில், 100 நாள் திமுக ஆட்சியில்,நான் பாஸ்மார்க் வாங்கியுள்ளேன் என முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்கள் கருணாநிதியிடம் பேசும் போது,திமுக ஆட்சி பொறுப்பேற்று 100 நாட்கள் ஆகி விட்டது. இந்த கால கட்டத்தில்எத்தனை அமைச்சர்கள் பாஸ் ஆகியுள்ளனர் என்று செய்தியாளர்கள் கேட்டனர்.அதற்கு முதல்வர் கருணாநிதி, எனக்குத் தான் பாஸ் மார்க் கொடுக்க வேண்டும். இந்தஅமைச்சர்களை தேர்வு செய்ததால் தான் 100 மதிப்பெண் பெறமுடிந்துள்ளது. எனவேதேர்ந்தெடுத்த நான் தான் பாஸ் ஆகியுள்ளேன்.
27 சதவீத இடஒதுக்கீடு தொடர்பாக தற்போது கிடைத்துள்ள கைதிகவர வேற்கிறது.மற்றவையும் கிடைக்க தொடர்ந்து போராடுவோம். இட ஒதுக்கீட்டை முழுமையாகஅமல்படுத்த மாட்டோம் என்று மத்திய அரசு சொல்லவில்லை. அந்த மட்டிலும்நாங்கள் மத்திய அரசின் முடிவில் திருப்தியடைந்துள்ளோம்.
என்.எல்.சி. விவகாரத்தில் காட்டிய அளவுக்கு கூட இட ஒதுக்கீட்டுப் பிரச்சினையில்நான் ஆர்வம் காட்டவில்லை என்று ராமதாஸ் கூறியுள்ளார். அடுத்த முறை அவரைசந்திக்கும் போது ஏன் அப்படி என்பதை அவரிடம் விளக்குவேன்.
இடஒதுக்கீடு பிரச்சினை என்பது புதிதாக வந்ததல்ல. 50 ஆண்டுகளாக இருந்து வரும்ஒரு பிரச்சினை. நேரு தான் முதன் முதலில் அரசியல் சட்டத்தில் இட ஒதுக்கீட்டுக்காகதிருத்தம் கொண்டு வந்தார்.
அதன் பின்னர் வி.பி.சிங் பிரதமராக இருந்த போது மண்டல் கமிஷன் பரிந்துரைகளைநிறைவேற்றே பெரும் எர்ப்பு காணப்பட்டது. அதையும் மீறி மண்டல் கமிஷன்பரிந்துரைகள் படிப்படியாக, நிறைவேற்றப்பட்டன. அதே போல தற்போதைய 27சதவீத ஒதுக்கீடும் தனது லட்சியத்தை மெல்ல மெல்ல எட்டும் என்றார் அவர்.












Click it and Unblock the Notifications