அமைச்சர் சில்மிஷ விவகாரம்: கேரள ஐ.ஜி. நாளை சென்னையில விசாரணை
சென்னை:
சென்னையிலிருந்து கொச்சி சென்ற விமானத்தில், முன்னாள் டிவி செய்தி வாசிப்பாளர்லட்சுமி கோபகுமாரிடம், கேரள அமைச்சர் ஜோசப் சில்மிஷம் செய்தது தொடர்பானபுகார் குறித்து லட்சுமியிடம் விசாரிப்பதற்காக கேரள பெண் ஐ.ஜி. சந்தியா நாளைசென்னை வருகிறார்.
கேரளாவைச் சேர்ந்த தனியார் தொலைக்காட்சியில் செய்திவாசிப்பாளராகபணியாற்றியவர் லட்சுமி கோபகுமார். தனது கணவர், குழந்தையுடன் சென்னையில்வசித்து வருகிறார்.இவர் சென்னையிலிருந்து கொச்சிக்கு தனியார் விமானததில் சென்ற போது பின்இருக்கையில் அமர்ந்தபடி கேரள பொதுப்பணித்துறை அமைச்சர் பி.ஜே.ஜோசப்சில்மிஷம் செய்ததாக சர்ச்சை எழுந்துள்ளது.
இதுகுறித்து விசாரிக்க பெண் ஐ.ஜி. சந்தியாவை கேரள முதல்வர் அச்சுதானந்தன்பணித்துள்ளார். இதையடுத்து ஐஜி சந்தியா தனது விசாரணையை தொடங்கியுள்ளார்.முதலில் கொச்சி நெடும்பச்சேரி விமான நிலையத்தில் அவர் விசாரணை நடத்தினார்.
இதையடுத்து லட்சுமியிடம், அவரது கணவரிடம் விசாரணை நடத்துவதற்காக நாளைசென்னைக்கு வருகிறார். நுங்கம்பாக்கத்தில் உள்ள லட்சுமியின் வீட்டிற்குச் சென்றுஅவர்களிடம் சந்தியா விசாரணை நடத்துகிறார். லட்சுமியின் வாக்குமூலத்தையும்பதிவு செய்கிறார்.
இந்த நிலையில், லட்சுமியும், அவரது கணவர் கோபகுமராம் வருகிற 12ம் தேதிக்குள்நீதிமன்றத்தில் ஆஜராகி வாக்குமூலம் அளிக்குமாறு அலுவா நீதிமன்றம்உத்தரவிட்டுள்ளது. திருவனந்தபுரத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் ரோசரியா என்பவர்இதுதொடர்பாக தாக்கல் செய்த மனுவில், அமைச்சர் ஜோசப் மற்றும் விமான பைலட்ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட அவரகோரியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி சம்பந்தப்பட்ட பெண் லட்சுமி மற்றும் அவரதுகணவர் ஆகிய இருவரும் செப்டம்பர் 12ம் தேதிக்குள் நீதிமன்றத்தில் ஆஜராகவேண்டும் என்று உத்தரவிட்டார்.-