For Quick Alerts
For Daily Alerts
Just In
முதல்வருக்கு திரையுலகின் பாராட்டு விழா
சென்னை:
திரையுலகுக்கு பல்வேறு சலுகைகளை அளித்ததற்காக திரையுலகின் பல்வேறுசங்கஙக்ள் ஒன்று சேர்ந்து செப்டம்பர் 23ம் தேதி பாராட்டு விழா நடத்தவுள்ளன.இதையொடடி 23 மற்றும் 24 ஆகிய இரு தேதிகளிலும் படப்பிடிப்பு நடைபெறாதுஎன அறிவிக்கப்பட்டுள்ளது.முதல்வர் கருணாநிதிக்கு திரையுலகம் சார்பில் பாராட்டுவிழா நடத்துவது குறித்துவிவாதிப்பதற்காக தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையில் ஆலோசனைக் கூட்டம்நடந்தது.
அதன்பின்னர் விழாக்குழுத் தலைவர் ராம.நாராயணன், செயலாளர் எஸ்.ஏ.சந்திரசேகர்ஆகியோர் செய்தியாளர்களிடம் பேசுகையில், தமிழகமுதல்வர் அறிவித்த வரிச்சலுகையால், சிறு முதலீட்டுப் படங்களைத் திரையிட நல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது.
இதே போல படப்பிடிப்புக்கான கட்டணங்களையும் வெகுவாக குறைத்துள்ள தால்திரையுலகின் அனைத்துப் பிரிவினரும் சந்தோஷமடைந்துள்ளனர். இதையடுத்துதமிழ்த் திரையுலகம் சார்பாக இயக்குநர்கள் சங்கம், தயாரிப்பாளர்கள் சங்கம் மற்றும்பல்வேறு சங்கங்கள் இணைந்து வருகிற செப்டம்பர் 23ம் தேதி மாலை 5 மணிக்குசென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில்முதல்வருக்குப் பாராட்டு விழா நடத்தமுடிவாகியுள்ளது.
விழாவை சிறப்பாக மேற்கொளள பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. நடிகர்சங்கம் சார்பில் சத்யராஜ் தலைமையில் 5 பேர் கொண்ட குழுவும், திரைப்படதொழிலாளர் சம்மேளனம் சார்பில் பெப்சி விஜயன் தலைமையிலும்,விநியோகஸ்தர்கள் கூட்டமைப்பு சார்பில் அருள்பதி தலைமையிலும், திரையரங்கஉரிமையாளர்கள் சங்கம் சார்பில் அபிராமி ராமநாதன், அண்ணாமலைதலைமையிலும் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
விழாவையொட்டி 23 மற்றும் 24 ஆகிய இரு தினங்களும் படப்பிடிப்புகளை ரத்துசெய்யமுடிவு செய்யப்பட்டுள்ளது. பிரமாண்ட கலை நிகழ்ச்சிக்கும் ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளது. சிறப்பு விழா மலரும் இந்த விழாவின் போது வெளியிடப்படும்என ராம.நாராயணனும், எஸ்.ஏ.சந்திரசேகரும் தெரிவித்தனர்.
இக்கூட்டத்தில் நடிகர்கள் சத்யராஜ், அப்பாஸ், சார்லி, நடிகை ஸ்ரீபிரியா,தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள், திரைப்பட தொழிலாளர் சம்மேளனபிரதிநிதிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Comments
Story first published: Sunday, August 27, 2006, 5:30 [IST]