அமர்நாத் பனிலிங்கம் இயற்கையானதே: விசாரணை கமிஷன்
Subscribe to Oneindia Tamil
ஸ்ரீநகர்:
சர்ச்சைக்குள்ளான அமர்நாத் பனிலிங்கம் இயற்கையாக உருவானதே என்று கே.கே.குப்தா விசாரணைக் கமிஷன்தெரிவித்துள்ளது.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் அமர்நாத் குகையில் ஆண்டுதோறும் உருவாகும் பனிலிங்கத்தை தரிசிக்கஆயிரக்கணக்கான யாத்ரீகர்கள் அமர்நாத் யாத்திரை செல்வது வழக்கம்.இந்த ஆண்டும் அமர்நாத் யாத்திரை வழக்கமான உற்சாகத்துடன் தொடங்கியது. ஆனால் இந்த ஆண்டுஇயற்கையாக பனிலிங்கம் உருவாகவில்லை.டசெயற்கையான பனிலிங்கம் தான் தரிசனத்திற்கு வைக்கப்பட்டிருந்ததாக சர்ச்சை கிளம்பியது. இதுகுறித்துவிசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி கே.கே.குப்தா தலைமையில் ஒரு நபர் விசாரணைக் கமிஷனை ஜம்முகாஷ்மீர்மாநில அரசு நியமித்தது. குப்தாகமிட்டி தற்போது தனது விசாரணை அறிக்கையை மாநில ஆளுநர்எஸ்.கே.சின்ஹாவிடம் சமர்ப்பித்துள்ளது.
அதில், பனிலிங்கம் இயற்கையான பனியால் தான் உருவானது என்பது நிரூபணமாகியுள்ளது. செயற்கைபனிலிங்கம் உருவாக்கப்படவில்லை. இதில் எந்த முறைகேடும் நடக்கவில்லை என்பது தெளிவாகியுள்ளது என்றுகுப்தா தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications