பர்னாலா மகன் மீதான கற்பழிப்புப் புகார் பொய்!
சண்டிகர்:
தமிழக ஆளுநர் பர்னாலாவின் மகனும், பஞ்சாப் அகாலி தள கட்சி எம்.எல்.ஏவுமான ககன்ஜித் சிங் மீதுகூறப்பட்ட கற்பழிப்பு புகார் பொய்யானது எனறு தெரிய வந்துள்ளது.
பர்னாலாவின் மகன் ககன் ஜித் சிங். சிரோண் மணி அகாலி தள கட்சிய எம்.எ.ல்.ஏவாக உள்ளார். இவரது வீட்டில்வேலை பார்த்து வந்த பெண் கடந்த மாதம் ககன் ஜித் சிங் மீது கற்பழிபபுப் புகார் கூறினார்.இதைத் தொடர்ந்து சிங் கைது செய்யப்பட்டார். அவரது சிறைக் காவல் நாளையுடன் முடிவடைகிறது. இந்தநிலையில், சிங் மீதான புகாரை நிரூபிக்க மரபணு சோதனைக்கு உத்தரவிடப்பட்டது.
அதன்படி மரபணு சோதனை அவருக்க நடத்தப்பட்டது. அந்த அறிக்கை முடிவு நேற்று வெளியானது. அதிலககன் ஜித் சிங்கின் உயிரணுக்குள் வேலைக்கார பெண்மணியின் ஆடையில் எங்கும் படவில்லை என்றுதெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ககன் ஜித் சிங் அந்தப் பெண்ணை கற்பழிக்கவில்லை என்று தெரியவந்துள்ளது.
இருப்பினும் இந்த வழக்கு தொடர்பாக புகார் கொடுத்த பெண்ணின் வாக்குமூலமே போதுமானது. அது தான்கோர்ட்டில் ஏற்றுக் கொள்ளப்படும் என விசாரணை போலீஸ் அதிகாரி தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications