ஜெ.வுக்கு சிகை அலங்காரக் கலைஞர்கள் கண்டனம்!
சென்னை:
முடி திருத்தும் கடையை முதல்வர் கருணாநிதி திறந்து வைத்ததை குறை கூறியுள்ள முன்னாள் முதல்வர்ஜெயலலிதாவுக்கு தமிழ்நாடு சவரத் தொழிலாளர்கள் கண்டனம் தெரிவத்துள்ளனர்.
இது தொடர்பாக சங்க தலைவர் தியாகராஜன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், முடிதிருத்தும் கடையைமுதல்வர் கருணாநிதி திறந்து வைத்துள்ளது தொடர்பாக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டுள்ளஅறிக்கை கண்டனத்துக்குரியது.முடி திருத்துவோர் இடையே இந்த அறிக்கை மிகுந்த மன வேதனையை ஏற்படுத்தியுள்ளது. கடந்த மாதம்சிகையலங்கார விரிவாக்க கட்டடத் திறப்பு விழாவில் முதல்வர் கருணாநிதி கலந்து கொண்டு திறந்து வைத்தார்.
இது தமிழகம் மட்டுமல்ல, அகில இந்திய அளிவில் முடி திருத்துவோர் மட்டுமல்ல, மக்களிடையேயும் மிகுந்தவரவேற்பைப் பெற்றது.
இச்சூழ்நிலையில், ஜெயலலிதா இதனை அரசியல் ஆக்கியுள்ளார். முடிதிருத்தும் கடையை திறந்து வைப்பதும்நாட்டுக்கு ஆற்றும் பணிதான்.
தமிழகத்தின் மண்ணின் மைந்தர்கள், ஆடவர்கள் முகத்தை அழகு படுத்தும் தொழிலைச் செய்யும் குடிமகனின்முடிதிருத்தும் கடையை திறந்து வைத்ததில் என்ன தவறு?
கருணாநிதியின் நல்லெண்ண நடவடிக்கையை கேலி செய்தது மிகவும் வேதனை அளிக்கிறது. இதைகண்டிக்கிறோம் என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications