அனிதா உறவினர் வீட்டில் மீண்டும் ரெய்டு!
Subscribe to Oneindia Tamil
திருச்செந்தூர்:
முன்னாள் அதிமுக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் உறவினரின் வீட்டில் இன்றுலஞ்ச ஒழிப்புப் போலீஸார் மீண்டும் சோதனை நடத்தினர்.
கடந்த 8ம் தேதி அனிதா ராதாகிருஷ்ணன், ஓ.பன்னீர் செல்வம் ஆகியோரது வீடுகள்,பினாமிகள், உறவினர்களின் வீடுகள், அலுவலகங்கள், வணிக நிறுவனங்களில்அதிரடி சோதனை நடத்தப்பட்டது.அந்த சோதனையின்போது ஏராளமான சொத்து ஆவணங்கள் பறிமுதல்செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக அனிதாராதாகிருஷ்ணனின் உறவினர் திலகன் என்பவரின் வீட்டில் இன்று லஞ்ச ஒழிப்புப்போலீஸார் மீண்டும் சோதனை நடத்தினர்.
திருச்செந்தூர் அருகே உள்ள அனிதாவின் சொந்த ஊரான தண்டுபத்து கிராமத்தில்உள்ள திலகனின் வீட்டில் சுமார் 3 மணி நேரம் சோதனை நடந்தது. அப்போது சிலமுக்கிய ஆவணங்கள் சிக்கியதாகக் கூறப்படுகிறது.
அதேசமயம், சென்னையில் ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்டுள்ள திலகனிடம்லஞ்ச ஒழிப்புப் போலீஸார் நேரிலும் விசாரணை நடத்தினர்.












Click it and Unblock the Notifications