ஹூண்டாய்: தமிழகத்தில் ரூ 3220 கோடி முதலீடு
சென்னை:
உலகின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனமான ஹூண்டாய் தமிழகத்தில் மேலும் ரூ. 3,220 மூதலீடு செய்யதிட்டமிட்டுள்ளது.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு விவரம்:முதல்வர் கருணாநிதியை ஹூண்டாய் மோட்டார்ஸ் நிறுவனத்தின் தலைவர் கொரியா நாட்டில் இருந்து வந்துள்ளதனது நிறுவனத்தின் மூத்த அதிகாரிகளுடன் சென்று சந்தித்துப் பேசினார். அப்போது ஹூண்டாய் நிறுவனத்திற்குதமிழக அரசு அளித்து வரும் ஆதரவுக்கு அதன் தலைவர் நன்றி தெரிவித்துக் கொண்டார்.
தமிழக தொழிலாளர்களால் தயாரிக்கப்படும் ஹூண்டாய் கார்கள் சிறந்த தரம் உடையவை என்றும், அவைஐரோப்பிய நாடுகளின் சந்தைகளில் புகழ்பெற்று விளங்கும் கார்களுடன் போட்டியிடத்தக்கவை என்றும்கூறினார்.
மேலும் ஹூண்டாய் நிறுவனம் தமிழ்நாட்டில் புதிய திட்டங்களில் ரூ. 3,220 கோடி அளவுக்கு முதலீடு செய்யதிட்டமிட்டிருப்பதாகவும், அதற்கு தமிழக அரசு தொடர்ந்து ஒத்துழைப்பு அளிக்கும் படியும் கருணாநிதியைகேட்டுக்கொண்டார்.
ஹூண்டாய் நிறுவனத்தின் புதிய முதலீட்டு திட்டங்களுக்கு தமிழக அரசு முழு ஒத்துழைப்பு அளிக்கும் என்றுகருணாநிதி உறுதி அளித்தார். இச்சந்திப்பின் போது தமிழக அரசின் தலைமைச் செயலாளர் எல்கே. திரிபாதியும்உடனிருந்தார்.












Click it and Unblock the Notifications