மதுரை: திமுக வேட்பாளர் கவுஸ் பாட்ஷா!
சென்னை:
மதுரை மத்திய தொகுதியில் திமுக சார்பில் துணை மேயர் கவுஸ் பாட்ஷாபோட்டியிடுவார் என முதல்வர் கருணாநிதி அறிவித்துள்ளார்.
மதுரை மத்திய தொகுதிக்கு அடுத்த மாதம் 11ம் தேதி இடைத் தேர்தல்நடைபெறுகிறது. இதில் அதிமுக சார்பில் ராஜன் செல்லப்பா போட்டியிடுகிறார். நேற்றுஅவர் தனது வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார்.இந் நிலையில் திமுக சார்பில் யார் போட்டியிடுவார் என அறிவிக்கப்படாமல்இருந்தது. மறைந்த அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல்ராஜனின் மகன் தியாகராஜன்அல்லது மனைவி ருக்மணி போட்டியிடக் கூடும் என எதிர்பார்க்கப்பட்டது.
இந் நிலையில் மதுரை மாநகராட்சி துணை மேயர் கவுஸ் பாட்ஷாவை வேட்பாளராகதிமுக களம் இறக்கியுள்ளது.
இதுதொடர்பான அறிவிப்பை முதல்வரும், திமுக தலைவருமான கருணாநிதி இன்றுவெளியிட்டார்.
![]() |
இதற்கிடையே தேமுதிக சார்பிலும் முஸ்லீம் வேட்பாளரை நிறுத்த விஜயகாந்த் முடிவுசெய்துள்ளதாகத் தெரிகிறது. மத்திய தொகுதியில் முஸ்லீம்கள் கணிசமான அளவில்இருப்பதால் இந்த முடிவுக்கு விஜயகாந்த் வந்திருப்பதாக தெரிகிறது.
கடந்த தேர்தலில் பொருளாளர் சுந்தரராஜன் போட்டியிட்டார். இம்முறைவிஜயகாந்த்தின் மனைவி பிரேமலதா அல்லது சுந்தரராஜனே போட்டியிடக் கூடும் எனஎதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், இப்போது முஸ்லீம் வேட்பாளரை களமிறக்க விஜய்காந்த்திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
22ம் தேதி தனது கட்சி வேட்பாளரை விஜயகாந்த் அறிவிப்பார் என தேதிக வட்டாரம்தெரிவிக்கிறது.













Click it and Unblock the Notifications