காவல் நிலையத்தில் கர்நாடக அமைச்சர் ரகளை!
பெங்களூர்:
பெங்களூர் காவல் நிலையத்திற்குள் புகுந்த கர்நாடக மாநில சிறுசேமிப்புத் துறை அமைச்சர் ராமச்சந்திர கவுடாஇன்ஸ்பெக்டரை கடுமையாக திட்டி ரகளை செய்தது அம்மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநில சிறுசேமிப்பு துறை மற்றும் திட்டத் துறை அமைச்சர் ராமச்சந்திர கவுடா. கிராமப் பஞ்சாயத்துஉறுப்பினரான இவரது ஆதரவாளர் நாகராஜ் என்பவர் மீது நிலத்தகராறு காரணமாக பெங்களூர் சுப்ரமணியபுராகாவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது.இதையடுத்து விசாரணைக்கு வருமாறு இன்ஸ்பெக்டர் சிவண்ணா, நாகராஜுக்கு உத்தரவிட்டார். இன்ஸ்பெக்டர்தன்னை விசாரணைக்கு வருமாறு கூப்பிடுவதாக அமைச்சரிடம் கூறினார் நாகராஜ்.
இதனால் ஆத்திரமடைந்த அமைச்சர், சம்பந்தப்பட்ட இன்ஸ்பெக்டரை தனது வீட்டுக்கு வருமாறு அழைத்தார்.ஆனால் அந்த இன்ஸ்பெக்டரோ வர முடியாது என்று கூறி விட்டார்.
இதனால் கோபமடைந்த கவுடா, சினிமா வில்லன் கணக்கில் காரை எடுத்துக் கொண்ட நேராக காவல்நிலையத்திற்கு வந்தார். அவருடன் அவரது உதவியாளர், பாதுகாப்பு அதிகாரி, ஏராளமான தொண்டர்களும்வந்தனர்.
இன்ஸ்பெக்டர் சிவண்ணாவைப் பார்த்து கோபமான குரலில், நான் கூப்பிட்டால் வர முடியாதா? நீ என்ன பெரியஆளா? என்ன நினைத்துக் கொண்டிருக்கிறாய்? நான் உத்தரவிட்டால் உங்க கமிஷனரே கையைக் கட்டிக்கொண்டு என் முன் நிற்பார். நீயெல்லாம் ஒரு சாதாரண இன்ஸ்பெக்டர். நான் சொன்னால் மதிக்க மாட்டாயா?
இனிமேல் எங்களது கட்சிக்காரர்களுக்கு எதிராக நீ செயல்படுவதாக உன் மீது புகார் வந்தது, அவ்வளவு தான்ஜாக்கிரதை என்று முழங்கியுள்ளார்.
அமைச்சரின் வேகத்தைப் பார்த்து விதிர்த்துப் போன அந்த அப்பாவி இன்ஸ்பெக்டர், அய்யா, இது சிவில்மேட்டர். இதில் எல்லாம் தலையிடக் கூடாது என்று உயர் அதிகாரிகள் எனக்கு உத்தரவிட்டுள்ளனர்.
எனவே இதுதொடர்பாக நீதிமன்றத்திற்குப் போங்கள் என்று இரு தரப்பினரையும் அறிவுறுத்தவே அழைத்தேன்என்று கூறியுள்ளார். ஆனால் அதையெல்லாம் கேட்கும் நிலையில் அமைச்சர் இல்லையாம். வந்தவர் வேகமாகதிட்டித் தீர்த்து விட்டு எடுடா வண்டியை என்று துண்டை உதறி தோளில் போட்டபடி கிளம்பிப் போய் விட்டாராம்.
பெங்களூர் காவல்துறை வட்டாரத்தில் மட்டுமல்லாது கர்நாடகம் முழுவதும் இந்த சம்பவம் பெரும் பரபரப்பைஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து அமைச்சர் கவுடாவிடம் கேட்டபோது, நான் காவல் நலையம் சென்றதுஉண்மைதான். சிவண்ணாவை எனக்கு முன்பே தெரியும்.
எனது வீட்டுக்கு வருமாறு கூறியிருந்தேன். அவர் பிசியாக இருந்ததால் வர முடியவில்லை. எனவே நான் அந்தப்பக்கமாக போகும்போது சிவண்ணாவைப் போய் பார்த்தேன் என்றார். காவல் நலையத்தில் எப்படிப் பேசினேன்என்பதை மட்டும் அமைச்சர் கவுடா விளக்க மறுத்து விட்டார்.
இந்த சம்பவம் குறித்து திட்டு வாங்கியதாக கூறப்படும் இன்ஸ்பெக்டர் சிவண்ணாவும், காவல் நிலையத்தில் உள்ளமற்றவர்களும் வாய் திறக்க மறுத்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications