கணவர் சந்தேகம்- பெண் தற்கொலை
Subscribe to Oneindia Tamil
சென்னை:
அக்கா கணவருடன் சிரித்துப் பேசியதற்காக தனது நடத்தை குறித்து கணவர்சந்தேகமடைந்ததால் மனமுடைந்த பெண் தற்கொலை செய்து கொண்டார்.
தாம்பரம் அருகே இரும்புலியூரைச் சேர்ந்த கூலித் தொழிலாளி சங்கர். இவரதுமனைவி ஆலயம்மாள். இவர்களுக்கு கல்யாணமாகி 5 மாதம்தான் ஆகிறது.ஆலயம்மாளுக்கு 17 வயதுதான் ஆவதாகக் கூறப்படுகிறது.ஆலயம்மாளின் அக்காவின் கணவருடன் ஆலயம்மாள் சிரித்துப் பேசிக்கொண்டிருந்தாராம். அதைப் பார்த்த சங்கருக்கு, ஆலயம்மாளின் நடத்தை குறித்துசந்தேகம் ஏற்பட்டது.
இதையடுத்து ஆலயம்மாளின் நடத்தையைக் குறிப்பிட்டு கேவலமாக பேசியுள்ளார்.
இதனால் வெறுத்துப்போன ஆலயம்மாள் உடலில் மண்ணெண்ணை ஊற்றி தீவைத்துக் கொண்டார். கருகிய நிலையில் சென்னை கீழ்பபாக்கம் அரசுமருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.












Click it and Unblock the Notifications