8 நக்சலைட்டுகள் சென்னையில் ஊடுறுவல்?
சென்னை:
ராக்கெட் லாஞ்சர் தயாரிக்க ஆர்டர் கொடுத்த நக்சலைட் ரகு போல மேலும் 8 நக்சலைட்டுகள் சென்னைக்குள்ஊடுறுவியிருப்பதாக மத்திய உளவுப் பிரிவு போலீஸாருக்குத் தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து அவர்களைப்பிடிக்க தீவிர தேடுதல் வேட்டை தொடங்கியுள்ளது.
சென்னை அம்பத்தூர் பகுதியில் உள்ள தொழிற்சாலைகளில் ராக்கெட் லாஞ்சர்கள் தயாரிக்கப்பட்டு அவைஆந்திராவில் உள்ள நக்சலைட்டுகளுக்கு அனுப்பப்பட்ட விவகாரம் சமீபத்தில் வெளிச்சத்திற்கு வந்தது.ஆந்திராவுக்கு அனுப்பப்பட்ட ராக்கெட் லாஞ்சர்களை தயாரிக்க ஆர்டர் கொடுத்தது மக்கள் போர்க்குழு என்றநக்சலைட் அமைப்பைச் சேர்ந்த ரகு மற்றும் அவரது மனைவி சுதாராணி என்பது தெரிய வந்தது.இதுதொடர்பாக நக்சலைட்டுகளுக்கு ஆயுதங்களை அனுப்பும் ஏஜென்ட் வீரபத்திர ராவ் மற்றும் ராக்கெட்லாஞ்சர்களை தயாரித்துக் கொடுத்த தொழிற்சாலைகளின் உரிமையாளர்கள் மற்றும் ஊழியர்கள் 6 பேரைசமீபத்தில் போலீஸார் கைது செய்தனர்.
தலைமறைவாகியுள்ள ரகு, சுதாராணியை போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த நிலையில் , ரகுவைப்போல மேலும் 8 முக்கிய நக்சலைட்டுகள் சென்னையில் ஊடுறுவியிருப்பதாக போலீஸாருக்குத் தகவல்கிடைத்துள்ளது. மத்திய உளவுப் பிரிவு போலீஸாருக்கு கிடைத்துள்ள இந்தத் தகவல் சென்னை போலீஸாருக்குதெரிவிக்கப்பட்டுள்ளது.
கும்மிடிப்பூண்டி, பொன்னேரி உள்ளிட்ட சில இடங்களில் இவர்கள் வாடகைக்கு வீடு எடுத்துத்தங்கியிருந்ததாகவும் உளவுப் பிரிவு தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போது இந்த 8 பேரும் சென்னைக்குள்ஊடுறுவியிருக்கலாம் எனவும் சந்தேகிக்கப்படுகிறது.
இதைத் தொடர்ந்து மத்திய உளவுப் பிரிவு போலீஸார் இதுகுறித்து தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications