அனைத்து எம்எல்ஏ அலுவலங்களையும் மூட உத்தரவு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
உள்ளாட்சித் தேர்தலையொட்டி தமிழகம் முழுவதும் உள்ள சட்டசபை உறுப்பினர்களின் அதிகாரப்பூர்வஅலுவலகங்களை மூட மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. இதையடுத்து அனைத்து எம்எல்ஏஅலுவலகங்களும் மூடப்பட்டன.உள்ளாட்சித் தேர்தலையொட்டி தேர்தல் ஆணையம் பல்வேறு கட்டுப்பாடுகளை செயல்படுத்தி வருகிறது. அதன்ஒரு கட்டமாக தமிழகத்தின் 234 தொகுதிகளிலும் உள்ள சட்டசபை உறுப்பினர்களின் அலுவலகங்களை மூடஉத்தரவிடப்பட்டுள்ளது.
தேர்தல் முடியும் வரை இங்கு பொது மக்களிடமிருந்து புகார் மற்றும் குறை மனுக்களை பெறத் தடைவிதிக்கப்பட்டுள்ளது. மேலும் அலுவலகங்களைப் பூட்டி சாவிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில்ஒப்படைக்கவும் உத்தரவிடப்பட்டது.
இதையடுத்து 234 தொகுதிகளிலும் உள்ள தொகுதி எம்.எல்.ஏக்களின் அலுவலகங்கள் பூட்டப்பட்டு சாவிகள்சம்பந்தப்பட்ட தாலுகா தாசில்தார்களிடம் ஒப்படைக்கப்பட்டுவிட்டன.












Click it and Unblock the Notifications