வருகிறது வட கிழக்குப் பருவ மழை!
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தமிழகத்தில் வட கிழக்குப் பருவ மழை வரும் 20ம் தேதி தொடங்கவுள்ளதாக சென்னை நுங்கம்பாக்கம் வானிலைஆராய்ச்சி நிலையம் தெரிவித்துள்ளது.
சென்னை நகரிலும், தமிழகத்தின் பல்வேறு இடங்களிலும் நேற்று இரவு பயங்கர இடியுடன் கன மழை பெய்தது.நள்ளிரவில் பெய்த இந்த மழையால் இன்று சென்னை நகரில் வெப்பம் தணிந்து குளுமை நிலவியது.இந்த திடீர் மழை குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் கூறுகையில்,
வரும் 20ம் தேதி வட கிழக்குப் பருவ மழை பெய்யத் தொடங்கும். எனவே நேற்று போலவே அடிக்கடி இடியுடன்கூடிய பலத்த மழை பெய்யும். இந்த சமயங்களில் மரங்களின் கீழ் படுப்பதை தவிர்ப்பதும், டிவி உள்ளிட்டசாதனங்களின் மின் இணைப்புகளை துண்டித்து வைப்பது ஆகியவற்றை கடைப்பிடிப்பதும் நல்லது என்றுவானிலை ஆராய்ச்சி நிலையம் தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டு வட கிழக்குப் பருவ மழையின்போது சென்னை தண்ணீரில் மூழ்கிப் போனது, தமிழகம் தத்தளித்துதடுமாறிப் போனது நினைவிருக்கலாம். இந்த ஆண்டு வட கிழக்குப் பருவ மழையை நினைத்து இப்போதேசென்னை மக்கள் பீதியில் மூழ்கத் தொடங்கியுள்ளனர்.












Click it and Unblock the Notifications