சீக்கிய பொற்கோவிலை தகர்க்க லஷ்கர் திட்டம்?
டெல்லி:
பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் நகரில் உள்ள சீக்கியர்களின் புனித கோவிலானபொற்கோவிலை குண்டு வைத்துத் தகர்க்கப் போவதாக லஷ்கர்-ஏ-தொய்பாதீவிரவாதிகள் மிரட்டல் விடுத்துள்ளதால் பொற்கோவிலுக்கு பாதுகாப்புபலப்படுத்தப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக லஷ்கர் அமைப்பின் பெயரில் வந்துள்ள கடிதத்தில், பொற்கோவில்வெள்ளிக்கிழமை குண்டு வைத்து தகர்க்கப்படும். இதேபோல, அமிர்தசரஸ் ரயில்நிலையம், பஸ் நிலையம் ஆகிய இடங்களிலும் குண்டுவெடிப்பு நடக்கும்.மேலும் 7ம் தேதி ஜம்முவில் உள்ள ரகுநாதர் கோவில், ரயில் நிலையம் ஆகியஇடங்களிலும், 8ம் தேதி வைஷ்ணவி கோவிலையும் குண்டு வைத்துத் தகர்க்கப்போவதாக லஷ்கர் அமைப்பு மிரட்டியுள்ளது.
காஷ்மீரில் பெரும் ரத்தக் களறியை ஏற்படுத்தப் போவதாகவும் அந்த அமைப்புமிரட்டியுள்ளது. இதையடுத்து பொற்கோவில் உள்ளிட்ட லஷ்கர் குறிப்பிட்டுள்ளஅனைத்து இடங்களுக்கும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, காசியில் உள்ள பிரபலமான விஸ்வநாதர் கோவிலுக்குள் பேனா,பொம்மை போன்றவற்றை எடுத்துச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. பேனாவுக்குகுண்டுகளை மறைத்து தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தலாம் என வந்த உளவுத் துறைதகவலையடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications