கர்நாடகத்தில் ஆளெடுப்பு இல்லை: இன்போசிஸ்
பெங்களூர்:
கர்நாடகத்திலிருந்து இந்த ஆண்டு இன்போசிஸ் நிறுவனத்திற்கு யாரும் தேர்வு செய்யப்பட மாட்டார்கள் எனஅந்நிறுவனம் அறிவித்துள்ளது.
இன்போசிஸ் நிறுவன மனித வளப் பிரிவு தலைவர் மோகன்தாஸ் பய் பெங்களூரில் செய்தியாளர்களிடம்பேசுகையில், இன்போசிஸ் நிறுவனத்திற்குப் புதிதாக 9500 பேரை வேலைக்கு தேர்வு செய்யத்திட்டமிடப்பட்டுள்ளது. அடுத்த 6 மாதத்திற்குள் இவர்கள் தேர்வு செய்யப்படுவர்.இருப்பினும் இந்த ஆண்டு கர்நாடகத்திலிருந்து யாரையும் வேலைக்குத் தேர்ந்தெடுக்கும் திட்டம் இல்லை.பெங்களூர், மைசூர், மங்களூர் ஆகிய இடங்களில் உள்ள இன்போசிஸ் நிறுவனங்களில் கர்நாடகத்தைச்சேர்ந்தவர்கள் ஏராளமான பேர் உள்ளனர்.
கர்நாடத்திலிருந்து இந்த ஆண்டு மேலும் பல சாப்ட்வேர் பொறியாளர்களை தேர்வு செய்யும் திட்டம் இல்லை.இந்த ஆண்டு வேலைக்கு எடுக்கப்படவுள்ளவர்கள் அனைவருமே வெளி மாநிலங்களைச் சேர்ந்தவர்களாகவேஇருப்பார்கள்.
மைசூரில் ரூ. 1200 கோடி மதிப்பில் உலக கல்வி மையத்தை நிர்மாணிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்தியாவில்இவ்வளவு பெரிய தொகையில் ஒரு கல்வி மையம் அமைவது இதுவே முதல் முறையாகும்.
தற்போதைய பொறியியல் படிப்புகளில் பெருமளவில் மாறுதல்களை மேற்கொள்வது தொடர்பாக அகில இந்தியதொழில்நுட்பக் கவுன்சிலுடன் பேசி வருகிறோம். தகவல் தொழில்நுட்பத் துறையில் மாணவ, மாணவியர் அதிகதிறமையுடன் கூடியவர்களாக மாற இது உதவும் என்றார் பய்.












Click it and Unblock the Notifications