கள்ள ஓட்டு: வாக்களிக்க முடியாத சு.சுவாமி!

Subscribe to Oneindia Tamil

சென்னை:

ஜனதாக் கட்சித் தலைவர் சுப்ரமணியம் சுவாமியின் ஓட்டை வேறு ஒருவர் கள்ள ஓட்டாக போட்டு விட்டதால்சுவாமியால் வாக்களிக்க முடியாத நிலை ஏற்பட்டது.

சென்னை மாநகராட்சிக்கு இன்று நடந்த தேர்தலில் பரவலாக கள்ள ஓட்டுக்கள் போடப்பட்டன. பெரும் வன்முறைமற்றும் அமளிக்கு மத்தியில் நடந்து வரும் தேர்தலில் ஜனதாக் கட்சித் தலைவர் சுப்ரமணியம் சுவாமியின் ஓட்டேகள்ள ஓட்டாக போடப்பட்டு விட்டதால் சுவாமியால் வாக்களிக்க முடியாமல் போனது.

இதுகுறித்து தமிழக ஜனதாக் கட்சித் தலைவர் சந்திரலேகா கூறுகையில், டாக்டர் சுவாமிக்கு 146வது வார்டில்வாக்கு உள்ளது. இன்று காலை பூத் எண் 2281க்கு அவர் வாக்களிக்கச் சென்றார்.

ஆனால் அவரது ஓட்டு ஏற்கனவே போடப்பட்டு விட்டதாகவும், இப்போது வாக்களிக்க முடியாது எனவும்அங்கிருந்தவர்கள் கூறினர். அவரது ஓட்டை யாரோ கள்ள ஓட்டாக போட்டு விட்டனர்.

இதனால் கோபமடைந்த சுவாமி, அங்கிருந்த தேர்தல் அலுவலர்களிடம் எனது ஓட்டையே கள்ள ஓட்டாக போட்டுவிட்டனர். இதை எப்படி நீங்கள் அனுமதித்தீர்கள் என்று வாதிட்டார். ஆனால் அவர்கள் உரிய பதிலைத்தரவில்லை.

நான் 150வது வார்டில் எனது வாக்கை செலுத்த சென்றபோது எனது அடையாள அட்டையை வாங்கிப் பார்த்தபின்னர் தான் அலுவலர்கள் என்னை வாக்களிக்க அனுமதித்தனர். அதுபோல சுவாமியின் வாக்குச் சாவடியில்செய்யாதது ஏன்.?

ஆளும் திமுக ஜனநாயகப் படுகொலையில் இறங்கியுள்ளது. கள்ள ஓட்டுக்கள் சரமாரியாகப் போடப்பட்டுள்ளஎன்றார் சந்திரலேகா.

சுவாமியாவது பரவாயில்லை. முன்பு நடிகர் திலகம் சிவாஜி கணேசன் ஓட்டையே கள்ள ஓட்டாகப் போட்டுஅவமானப்படுத்தியது நினைவிருக்கலாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+