தேர்தல் வன்முறை: கலாமுக்கு வைகோ தந்தி

Subscribe to Oneindia Tamil

சென்னை:

சென்னை மாநகராட்சி தேர்தலில் ஏற்பட்ட வன்முறைச் சம்பவம் தொடர்பாக குடியரசுத்தலைவர் அப்துல் கலாம் நடவடிக்கை எடுக்கக் கோரி மதிமுக பொதுச் செயலாளர்வைகோ தந்தி அனுப்பியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் அனுப்பியுள்ள தந்தியில், சென்னை மாநகராட்சித் தேர்தலில்திமுகவினர் வரலாறு காணாத வன்முறையில் இறங்கியுள்ளனர். தேர்தலை ரத்து செய்துவிட்டு மறு தேர்தல் நடத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

காவல்துறையின் உதவியுடன் திமுகவினர் வன்முறை வெறியாட்டம் ஆடியுள்ளனர்.ஜனநாயகம் படுகொலை செய்யப்பட்டுள்ளது. கேள்விக்குறிக்குள்ளாகியுள்ளது.அதிமுக மற்றும் மதிமுக வேட்பாளர்கள் கொடூரமாக தாக்கப்பட்டுள்ளனர். பலவாக்குச் சாவடிகளில் வேட்பாளர்களும், பூத் ஏஜென்டுகளும்விரட்டியடிக்கப்பட்டுள்ளனர். வாக்காளர்களைக் கூட உள்ளே அனுமதிக்காமல் கள்ளஓட்டுக்கள் போடப்பட்டுள்ளன.

18வது வார்டில் போட்டியிடும் மதிமுக வேட்பாளர் கொடூரமாக தாக்கப்பட்டுஉயிருக்கு ஆபத்தான நிலையில் அரசு பொது மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அதிமுக மற்றும் மதிமுக வேட்பாளர்களுக்கு உரிய பாதுகாப்பு கொடுக்க குடியரசுத்தலைவர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார். இதேபோல பிரதமர்மன்மோகன் சிங், ஆளுநர் பர்னாலாவுக்கும் வைகோ தந்தி அனுப்பியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+