40ஐ கற்பழித்த 28 வயது பூசாரி!
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
டெல்லியில் 40 வயதுப் பெண்ணைக் கற்பழித்ததாக 28 வயது கோவில் பூசாரியை போலீஸார் கைதுசெய்துள்ளனர்.
வட மேற்கு டெல்லியில் உள்ள நிரன்காரி காலனி என்ற இடத்தில் கெளரி சங்கர் கோவில் உள்ளது.இக்கோவிலுக்கு 20 நாட்களுக்கு முன்பு உ.பி. மாநிலம் பாலியா என்ற இடத்தைச் சேர்ந்த 40 வயதுப் பெண்வந்தார்.ஊரை விட்டு வந்து விட்ட அவர் கோவிலில் சிறிது நாட்கள் தங்க அனுமதிக்கமாறு கோரியுள்ளார். இதையடுத்துகோவில் நிர்வாகம் அவரை தங்கிக் கொள்ள அனுமதித்தது.கோவிலில் தங்கியிருந்து சிறு சிறு கோவில் வேலைகளை செய்து வந்தார் அப்பெண். கடந்த 20 நாட்களாக அவர்தங்கியுள்ளார். இக்கோவிலில் பூசாரியாக இருப்பவர் பிரவேஷ்.
நேற்று பிற்பகல் 2 மணியளவில் அந்தப் பெண்ணை தனது அறைக்கு அழைத்துள்ளார் பிரவேஷ். அங்கு சென்றபின்னர் அப்பெண்ணை பிரவேஷ் பலவந்தப்படுத்தி கற்பழித்து விட்டதாக கூறப்படுகிறது.
அப்பெண் கொடுத்த புகாரின் பேரில் போலீஸார் பூசாரியைக் கைது செய்தனர்.












Click it and Unblock the Notifications