சங்கரராமன் வழக்கு: நவ. 20க்கு ஒத்திவைப்பு
Subscribe to Oneindia Tamil
புதுச்சேரி:சங்கரராமன் கொலை வழக்கு விசாரணை நவம்பர் 20ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது.
சங்கரராமன் கொலை வழக்கு விசாரணை புதுவை செஷன்ஸ் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இன்று நீதிபதிசின்னப்பாண்டி முன்னிலையில் வழக்கு விசாரணைக்கு வந்தது.
அப்போது குற்றம் சாட்டப்பட்ட ஜெயேந்திரர் உள்ளிட்ட 8 பேர் கோர்ட்டுக்கு வரவில்லை. அவர்கள் சார்பில்அவர்களது வழக்கறிஞர்கள் விளக்க மனுக்களை தாக்கல் செய்தனர். மற்றவர்கள் ஆஜராகியிருந்தனர்.
இந்த வழக்கு விசாரணைக்கு ஏற்கனவே உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. அந்த வழக்குதொடர்ந்து உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால் வழக்கு விசாரணையை நவம்பர் 20ம் தேதிக்கு நீதிபதிஒத்திவைத்தார்.












Click it and Unblock the Notifications