கரும்பு கொள்முதல் விலை உயர்வு: கருணாநிதி
சென்னை:கரும்பு விலையை டன்னுக்கு ரூ. 1025 என தமிழக அரசு நிர்ணயித்துள்ளதாக தல்வர்கருணாநதி அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில்,
கரும்பு விவசாயிகளிடமிருந்து சர்க்கரை ஆலைகளுக்கு அரவைக்குப் பெறப்படும்கரும்பின் விலையை, 9 சதவீத பிழிதிறன் கொண்ட கரும்புக்கு டன்னுக்கு ரூ. 802 எனமத்திய அரசு நிர்ணயம் செய்துள்ளது.
ஆனால், கரும்பு விவசாயிகளின் நலனை முன்னிட்டு டன் விலை. ரூ. 1,025 எனதமிழக அரசு நிர்ணயம் செய்துள்ளது.
நடப்பு ஆண்டில் ஏற்கனவே கொள்முதல் செய்யப்பட்ட கரும்புக்கும் முன் தேதியிட்டுஇந்த விலை வழங்கப்படும்.
9 சதவீதத்திற்கு மேல் பிழிதிறன் கொண்ட கரும்புக்கு கூடுதல் தொகை வழங்கப்படும்என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கரும்பு வியைை டன்னுக்கு ரூ. 802 ஆகக் குறைத்ததாக கரும்பு விவசாயிகள்தமிழகத்தின் பல பகுதிகளில் போராட்டம் நடத்தினர். கரும்பு விலையை உடனடியாகஉயர்த்தாவிட்டால் அதிமுக சார்பில் போராட்டம் நடத்தப்படும் என அக்கட்சியின்பொதுச் செயலாளர் ஜெயலலிதா அறிவித்திருந்தார் என்பது நினைவிருக்கலாம்.