சென்னையிலிருந்து தோஹாவுக்கு நேரடி விமானம்
துபாய்:கத்தார் தலைநகர் தோஹாவுக்கு சென்னையிலிருந்து புதிய நேரடி விமான சேவை தொடங்கப்படவுள்ளது.
மத்திய கிழக்கு ஆசிய நாடான கத்தாரிலிருந்து இந்தியாவுக்கு கத்தார் ஏர்வேஸ் நிறுவனம் விமான சேவையைமேற்கொண்டுள்ளது. தற்போது தனது இந்திய சேவையை இந்த நிறுவனம் விரிவுபடுத்தத் திட்டமிட்டுள்ளது.
இதுதொடர்பாக கத்தார் ஏர்வேஸ் நிறுவன தலைமை செயல் அதிகாரி அக்பர் அல் பாக்கர் வெளியிட்டுள்ளசெய்திக்குறிப்பு:
கத்தாருக்கும், இந்தியாவுக்கும் இடையிலான விமான பயணத்தை வாரத்திற்கு 30 டிரிப்புகளிலிருந்து 49 ஆகஅதிகரிக்க அனுமதி கிடைத்துள்ளது.
தென்னிந்திய நகரமான சென்னைக்கும், மேற்கு பிராந்திய நகரான அகமதாபாத்திற்கும் கத்தார் தலைநகர்தோஹாவிலிருந்து புதிதாக விமான சேவை தொடங்கப்படும். அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் இந்த புதியசேவை தொடங்குகிறது.
மேலும், தற்போது மும்பை, திருவனந்தபுரம் ஆகிய நகரங்களுக்கு இயக்கப்படும் விமான சேவைஇரட்டிப்பாக்கப்படும். இது உடனடியாக அமலுக்கு வருகிறது. இந்த நகரங்களுக்கு பெரிய விமானங்கள்இயக்கப்படும்.
மேலும் கொச்சி, ஹைதராபாத் ஆகிய நகரங்களுக்கும் புதிதாக விமான சேவை தொடங்கப்படும் என்று அவர்கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications