ஜெ, சசி நேரில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவு

Subscribe to Oneindia Tamil

சென்னை:வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்யாத வழக்கில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, அவரது தோழி சசிகலாஆகியோர் ஜனவரி 29ம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என்று சென்னை எழும்பூர் பொருளாதார குற்றத் தடுப்புநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஜெயலலிதாவும், சசிகலாவும் கடந்த 199-94ம் ஆண்டுக்கான வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்யாததுமற்றும் சசி என்டர்பிரைசசஸ் நிறுவனத்திற்கான 1991-92, 1992-93ம் ஆண்டு கணக்குகளை தாக்கல் செய்யாததுதொடர்பாக இரு வழக்குகளை வருமான வரித்துறை தொடர்ந்துள்ளது.

இந்த வழக்கிலிருந்து தங்களை விடுவிக்கக் கோரி ஜெயலலிதாவும், சசிகலாவும் தாக்கல் செய்த மனுக்கள் கடந்தஜூன் 14ம் தேதி பொருளாதார குற்றத் தடுப்பு நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டன.

இந்த நிலையில் இன்று இந்த வழக்கு விசாரைணக்கு வந்தது. அப்போது இரு வழக்குகளிலும்குற்றச்சாட்டுக்களைப் பதிவு செய்ய முகாந்திரம் இருப்பதாக நீதிபதி ஜே.வி.ராஜ் தெரிவித்தார். மேலும் வழக்கைஜனவரி 29ம் தேதிக்கு ஒத்திவைத்த நீதிபதி அன்று ஜெயலலிதாவும், சசிகலாவும் நேரில் ஆஜராக வேண்டும் எனஉத்தரவிட்டார்.

அன்று முதல் தினசரி அடிப்படையில் இந்த வழக்குகளின் விசாரணை நடைபெறும் எனவும் நீதிபதி அறிவித்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+