For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

புரோட்டாவுக்காக கைதி தற்கொலை மிரட்டல்!

By Staff
Google Oneindia Tamil News

சேலம்:புரோட்டா தராவிட்டால் தற்கொலை செய்து கொள்ளப் போவதாக கூறி மரத்தில் ஏறிபோராட்டம் நடத்திய கைதியை சிறை போலீஸார் பல மணி நேரப் போராட்டத்திற்குப்பின்னர் கீழே இறக்கினர்.

சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள கைதிகளுக்கு காலையில் பொங்கல்அல்லது உப்புமா, மதியம் சாப்பாடு, இரவு சாப்பாடு, சுண்டல் ஆகியவைவழங்கப்படுகிறது.

உடல் பலகீனமாக உள்ளவர்களுக்கு புரோட்டா தர சிறை டாக்டர்கள்பரிந்துரைப்பார்கள். இந்த நிலையில் சந்தோஷ் ராஜ் என்பவர் எனக்கும் புரோட்டாவழங்க வேண்டும் என்று சிறை நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்தார்.

ஆனால் டாக்டர்கள் பரிந்துரை இல்லாமல் புரோட்டா தர முடியாது என்று சிறைஅதிகாரிகள் கூறி விட்டனர். இதனால் கடுப்பான சந்தோஷ் ராஜ், சிறை வளாகத்திற்குள்உள்ள பெ>ய மரத்தின் மீது ஏறி உச்சிக்குப் போய் விட்டார்.

எனக்கு புரோட்டா வழங்க வேண்டும். இல்லாவிட்டால் இங்கிருந்து குதிதித்துத்தற்கொலை செய்து கொள்வேன் என்று அவர் மிரட்டியதால் அங்கு பரபரப்புஏற்பட்டது.

பின்னர் பிற கைதிகளும், சிறை அதிகாரிகளும் கிட்டத்தட்ட 4 மணி நேரம்சந்தோஷ்ராஜிடம் பேசி சமாதானப்படுத்தி கீழே இறக்கினர். அதன் பின்னர் சிறைக்குள்அவர் அடைக்கப்பட்டார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X