எம்ஜிஆர் கடிதம்: கேரளாவுக்கு பொ.ப.து. மறுப்பு
மதுரை:முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 136 அடியாக குறைப்பதாக கூறி எம்.ஜி.ஆர். கடிதம் எழுதியதாககேரள முதல்வர் அச்சுதானந்தன் கூறுவது பொய் என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.
முல்லைப் பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக சமீபத்தில் அச்சுதானந்தன் திருவனந்தபுரத்தில்செய்தியாளர்களிடம் பேசுகையில், அணையின் நீர் மட்டத்தை 136 அடிக்கு மேல் உயர்த்த மாட்டோம் என கூறி1979ம் ஆண்டு அப்போதைய முதல்வர் எம்.ஜி.ஆர். கடிதம் எழுதியதாக கூறியிருந்தார்.
இந்தக் கடிதத்தை உச்சநீதிமன்றத்தில் ஒரு ஆதாரமாக தாக்கல் செய்யப் போவதாகவும் அச்சுதானந்தன்தெரிவித்திருந்தார். இதற்கு தற்போது தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகள் மறுப்பு தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து அவர்கள் கூறுகையில், 1979ம் ஆண்டு பெரியாறு அணை பலவீனமாகி விட்டதாக கேரளா புகார்எழுப்பியது. இதையடுத்து மத்திய நீர்வள ஆணயர் அணையைப் பலப்படுத்த பரிந்துரைத்தது.
மேலும் அணையைப் பலப்படுத்தும் பணி முடியும் வரை 136 அடியாக தண்ணீரை இருப்பு வைக்கவும், பணிமுடிந்தவுடன் 152 அடி வரை நீரை உயர்த்திக் கொள்ளலாம் எனவும் மத்திய நீர்வள ஆணையம் கூறியதன்அடிப்படையில் அதுபோல ஒப்பந்தம் போடப்பட்டது.
முதல்வராக இருந்த எம்.ஜி.ஆர். 136 அடிக்கு மேல் உயர்த்த மாட்டோம் என கடிதம் எழுதியிருக்க வாய்ப்பேஇல்லை. எனவே திசை திருப்புவதற்காக எம்.ஜி.ஆர். கடிதம் என தவறான தகவலை கேரள முதல்வர்எழுப்புவதாக கருதுகிறோம் என்று அவர்கள் கூறுகின்றனர்.












Click it and Unblock the Notifications