பொடா-நக்ஸல்கள் 10 பேர் ஜாமீனில் விடுதலை
சென்னை:பொடா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த 10 பேரை ஜாமீனில் விடுதலைசெய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
கடந்த 2002ம் ஆண்டு தர்மபுரி மாவட்டம் அரூர், ஊத்தங்கரை பகுதிகளில் போலீஸார் நக்சலைட் வேட்டையில்இறங்கினர். அப்போது 32 பேர் போலீஸ் பிடியில் சிக்கினர். அவர்கள் மீது பொடா சட்டத்தின் கீழ் நடவடிக்கைஎடுக்கப்பட்டது.
அவர்களில் ரீட்டா மேரி உள்ளிட்ட 6 பெண்கள் சில மாதங்களுக்கு முன்பு விடுதலை செய்யப்பட்டனர். இந்தநிலையில் மார்ட்டின் உள்ளிட்ட 10 பேர் தங்களை ஜாமீனில் விடுதலை செய்யக் கோரி சென்னைஉயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், இதுதொடர்பாக அறிக்கை தாக்கல் செய்யுமாறு பூந்தமல்லி பொடாநீதிமன்றத்திற்கு உத்தரவிட்டது. அதன்படி பொடா நீதிமன்ற நீதிபதி, உயர்நீதிமன்றத்திற்கு அறிக்கைஅனுப்பினார். அதில், 10 பேர் மீதும் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு விட்டதாகவும், விசாரணை நடந்துவருவதாகவும் தெரிவித்திருந்தார்.
இதையடுத்து இன்று நீதிபதிகள் பாலசுப்ரமணியம், ஜெயபால் ஆகியோர் அடங்கிய பெஞ்ச், 10 பேரையும் அரசுஊழியர் ஒருவரின் ஜாமீனின் பேரிலும், தனி நபர் ஜாமீனின் பேரிலும் விடுதலை செய்யலாம் என உத்தரவிட்டது.மேலும் வழக்கு விசாரணைக்கு 10 பேரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.












Click it and Unblock the Notifications