அன்பு தான் ஒரே வழி: அமிர்தானந்த மயி
திருச்சி:கடந்தகால, எதிர்கால நிகழ்வுகளை மனதில் கொண்டு கவலைப்பட்டால்நிகழ்காலத்தை திறமையுடன் கையாள முடியாது. நமது முயற்சியும், இறைவன்அருளும் சேர்ந்தால்தான் வாழ்க்கையில் வெற்றி பெற முடியும் என மாதாஅமிர்தானந்தமயி கூறினார்.
திருச்சி வந்த அமிர்தானந்த மயி, அங்குள்ள தேசியக் கல்லூரி மைதானத்தில் நடந்தநிகழ்ச்சியில் சொற்பொழிவாற்றினார். பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொண்ட இந்நிகழ்ச்சியில் அவர் பேசுகையில், கூலி வேலை செய்பவருக்கு அடுத்து வேலைகிடைக்க வேண்டுமே என்ற கவலை.
வேலை செய்பவருக்கு உத்தியோக உயர்வு பற்றிய கவலை. இப்படி உலகில்மனிதர்களிடையே கவலைகள் பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது. இதனால் மனஇறுக்கம் அதிகமாகிறது.
நாம் நம் பிரச்னைகள் அனைத்தையும் இறைவனிடம் ஒப்படைக்க வேண்டும்.இறைவன் எண்ணப்படி அனைத்தும் நன்றாக நடக்கும். அன்புடனும், ஆதரவானவார்த்தைகளுடனும் பிறரை அணுகும் போது உண்மையான பக்தி கிடைக்கும்.
இந்த நற்பண்புகள் குடும்பத்தில் இருந்தே வளர வேண்டும். கணவன்,மனைவியிடையே உள்ள அன்பை மனதுக்குள்ளேயே வைத்திருந்தால் மட்டும்போதாது . அதை வெளிக்காட்டினால் தான் கணவன், மனைவி உறவு பலப்படும்.
வாழ்க்கையில் ஏற்பட்ட கசப்பான அனுபவங்கள், காயங்கள் மறைய வேண்டும்என்றால் அதற்கு அன்பு ஒன்றே வழியாகும் என்றார் அமிர்தானந்தமயி.












Click it and Unblock the Notifications