மேட்டூருக்கு பாதுகாப்பு-ஓகேனக்கல் வெறிச்
மேட்டூர்:காவிரி நடுவர் மன்ற தீர்ப்பு வெளியானதையடுத்து மேட்டுர் ஆணைக்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
மேட்டூர் அணையில் முன் எச்சரிக்கையாக, வலது கரை , இடது கரை மற்றும் அணையின் கவர்னர் வியூ பாயின்ட் ஆகிய இடங்களில் துப்பாக்கிஏந்திய போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
வெறிச்சோடிய ஓகேனக்கல்:
நடுவர் மன்றத் தீர்ப்பின் எதிரொலியாக தொடர்ந்து பதற்றம் நிலவுவதால் சுற்றுலா தலமான ஓகேனக்கல் வெறிச்சோடிக் காணப்படுகிறது.
தமிழக, கர்நாடக எல்லைப் பகுதியில், தமிழகத்திற்குள் காவிரி நுழையும் பகுதியான ஓகேனக்கலுக்கு கடந்த இரு நாட்களாக சுற்றுலா பயணிகள்யாரும் வரவில்லை.
பிலிகுண்டு, ஆலம்பாடி, மாருகொட்டாய், ராசிமலை, செங்கப்பாடி உள்ளிட்ட கர்நாடக மலைப் பகுதிகளில் தமிழர்கள் தான் அதிக அளவில்வசிக்கின்றனர். இவர்கள் எது வாங்குவதாக இருந்தாலும் தமிழகத்திற்குள் உள்ள ஓகேனக்கல், பெண்ணாகரம், கொளத்தூர், கோவிந்தப்பாடி ஆகியபகுதிகளுக்குத்தான் வர வேண்டும்.
தற்போது கர்நாடகத்தில் நிலவி வரும் பதட்டம் காரணமாக இப்பகுதிகளில் பாதுகாப்பு பன்மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. ஓகேனக்கல்பகுதியிலும் போலீஸார் அதிக அளவில் குவிக்கப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications