ரயில்வே: கேரளத்துக்கு கருணாநிதி எச்சரிக்கை!
சென்னை:சேலம் ரயில் கோட்டம் அமைப்பதில் எந்தத் தாமதமும் இருக்கக் கூடாது. எல்லைகளை மாற்ற முயன்றாலோ, தடை ஏற்படுத்த முயன்றாலோபெரும் கிளர்ச்சி வெடிப்பதைத் தவிர்க்க முடியாது என்று முதல்வர் கருணாநிதி கடுமையாக எச்சரித்துள்ளார்.
சேலத்தைத் தலைமையிடமாகக் கொண்டு புதிய ரயில் கோட்டம் அமைப்பதற்கு கேரளாவில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இந்தக் கோட்டத்தைத்தடுக்க கேரள அரசும் பல வழிகளில் முயன்று வருகிறது.
இந்த நிலையில் சேலம் கோட்டத்தை உருவாக்குவதால் ஏற்படும் இழப்புகளை சமாளிக்க மதுரை கோட்டத்தில் உள்ள சில பகுதிகளை பாலக்காடுகோட்டத்துடன் இணைக்க வேண்டும் என்று கேரள அரசு யோசனை தெரிவித்துள்ளது.
இந்தச் சூழ்நிலையில், முதல்வர் கருணாநிதி மத்திய ரயில்வே அமைச்சர் லாலு பிரசாத் யாதவுக்கு ஃபேக்ஸ் மூலம் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.அதில், புதிதாக உருவாக்கப்பட்டுள்ள சேலம் ரயில்வே கோட்டம் எந்தவித காலதாமத.ம் இன்றி, அளவிலோ, எல்லையிலோ எந்தவித மாற்றமும்செய்யாமல் செயல்பட வேண்டும் என்று தமிழக மக்கள் எதிர்பார்த்துக் கொண்டுள்ளனர்.
இந்த நிலையில், முதலாவதாக உருவாக்கப்பட்ட இந்த்த திட்டத்திற்கு எதிராக சில செயற்கையான பிரச்சினைகள் கிளப்பப்படுவது குறித்து மக்கள்அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
ஏற்கனவே பொதுமக்களிடம் அறிவிக்கப்பட்ட சேலம் ரயில்வே கோட்டம் கோவை, போதனூரை உள்ளடக்கியதாகும். தமிழக மக்களின் நலனைக்கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்ட திட்டம் இது. இந்தத் திட்டத்தில் ஏதாவது மாற்றம் செய்தால் அதை தமிழக மக்கள் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள்.
இது பெரிய கருத்து வேறுபாட்டிற்கும், போராட்டத்திற்கும் வழி வகுத்து விடும். கிளர்ச்சிகள்தான் வெடிக்கும்.
ஏற்கனவே உள்ள திட்டத்தை மறு பரிசீலனை செய்ய மேலும் எந்தப் பேச்சுவார்த்தையும் தேவையில்லை என்ற உறுதியான எண்ணத்தில் நான்இருக்கிறேன்.
தமிழக நலனுக்கு ஆதரவு அளிக்கும் வகையில், முதலாவதாக போடப்பட்ட திட்டத்தில் உறுதியாக இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்என்று கூறியுள்ளார் கருணாநிதி.












Click it and Unblock the Notifications