90 வயது தாத்தாவிடம் லஞ்சம் கேட்ட டாக்டர்

Subscribe to Oneindia Tamil

பனாஜி:கோவா மாநிலத்தில், 90 வயது பழுத்த முதியவரிடம், அவருக்கு சொந்தமான கட்டடத்துக்கு வாடகை கொடுக்க லஞ்சம் கேட்ட அரசு டாக்டர்சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

கோவா மாநிலம் பிர்னா என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் தத்தாராம் நாயக். 90 வயதாகும் இவருக்கு சொந்தமான கட்டடத்தில், மாநில அரசின்கால்நடை மருத்துவமனை செயல்பட்டு வருகிறது.

இந்த நிலையில், மாநில கால்நடைத்துறை அமைச்சர் மற்றும் தலைமைச் செயலாளருக்கு தத்தா ராம் நாயக் ஒரு கடிதம் எழுதினார். அதில், எனக்குச்சொந்தமான கட்டடத்தில் அரசின் கால்நடை மருத்துவமனை இயங்கி வருகிறது.

இந்தக் கட்டடத்துக்குரிய வாடகையை சரிவர தராமல் இழுத்தடிக்கிறார்கள். நான் இதுகுறித்து அந்த மருத்துவமனையில் பணியாற்றும் டாக்டர்மஹதேவிடம் கேட்டபோது, லஞ்சம் கொடுங்கள், அப்போதுதான் வாடகைக்கான ரசீதில்கையெழுத்திடுவேன் என்று கூறினார்.

அவர் மீது உரிய நடவடிக்கை எடுத்து எனது வாடகைப் பணத்தை வசூலித்துத் தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கடிதத்தில் கூறியிருந்தார்நாயக்.

இந்த சம்பவம் கோவா மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து விசாரித்த மாநில அரசு, டாக்டர் மீதான குற்றச்சாட்டுஉண்மையானது என்று தெரிய வந்தததைத் தொடர்ந்து அவரை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+