கூட்ட நெரிசலில் சிக்கி மூதாட்டி பலி

Subscribe to Oneindia Tamil

மதுரை:மதுரை மாவட்ட ஆட்சித் தலைவராக ஜவகர் அறிவிக்கப்பட்டுள்ளார்.

மதுரை மாவட்ட ஆட்சித் தலைவராக இருந்தவர் உதயச்சந்திரன். ஆளுங்கட்சியினரின் நெருக்குதலுக்குப் பணியாமல்நேர்மையாக வேலை பார்த்து வந்தார் உதயச் சந்திரன்.

முமுக.அழகிரியைச் சுற்றிலும் உள்ளவர்கள் கொடுத்த நெருக்குதலில் சிக்கித் தவித்து வந்த அவர், சமீபத்தில், ஈரோடுஆட்சித் தலைவராக இடமாற்றம் செய்யப்பட்டார்.

உதயச்சந்திரன் இடமாற்றம் மதுரை மாவட்ட மக்களுக்கு பெரும் அதிர்ச்சியைக் கொடுத்தது. தேர்தல் என்றாலே என்னஎன்று தெரியாமல் இருந்து வந்த பாப்பாபட்டி, கீரிப்பட்டி, நாட்டாமங்கலம் ஆகிய தலித் பஞ்சாயத்துக்களுக்குமிகச் சிறப்பான முறையில் தேர்தலை நடத்த உதவியவர் உதயச்சந்திரன்.

இதுதவிர பெரும் பரபரப்புக்கு மத்தியில் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டை ஒரு இறப்பு கூட நேராமல் மிக நேர்த்தியாகநடத்தி முடித்தவர். நேரடியாக அலங்காநல்லூருக்கே சென்ற முகாமிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகளை தனிப்பட்ட முறையில்கவனித்ததோடு நில்லாமல், பாதுகாப்புக்கு நின்ற போலீஸாருக்கு வாட்டர் கேன் கொடுத்தும் பணியில் தீவிரமாகஇருந்தவர்.

இப்படிப்பட்ட உதயச்சந்திரன் அரசியல் நெருக்குதல் காரணமாக இடமாற்றம் செய்யப்பட்டதால் மதுரை மக்கள் பெரும்அதிருப்திக்கு ஆளாகினர்.

இந்த நிலையில் உதயச்சந்திரனுக்குப் பதில் கார்த்திகேயன் புதிய ஆட்சித் தலைவராக நியமிக்கப்பட்டார். ஆனால் அவரும்உடனடியாக நீண்ட விடுப்பில் சென்று விட்டார். இதனால் மதுரையில் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டது.

இந்தச் சூழ்நிலையில் தற்போது மதுரை மாவட்ட ஆட்சித் தலைவராக எஸ்.எஸ்.ஜவகர் நியமிக்கப்பட்டுள்ளதாக அரசுசெய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது ஜவகர், விருதுநகர் மாவட்ட ஆட்சித் தலைவராக இருந்து வருகிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+