கூட்ட நெரிசலில் சிக்கி மூதாட்டி பலி

Subscribe to Oneindia Tamil

திருநெல்வேலி:குடிநீர் இணைப்புக்கான விண்ணப்பம் வழங்க வரிசையில் நின்ற மூதாட்டி, நெரிசலில் சிக்கிப் பரிதாபமாக பலியானார்.

திருநெல்வேலி மாவட்டம் சுரண்டை என்ற கிராமத்தில், கூட்டுக் குடிநீர்த் திட்டத்தின் கீழ் புதிய வீட்டு இணைப்புகள் பெற3ம் தேதி விண்ணப்பம் அளிக்கலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இதையடுத்து ஏராளமான பேர் விண்ணப்பத்துடன், ஜவஹர்லால் நேரு நடுநிலைப்பள்ளியில் குவிந்தனர். ஒரே நேரத்தில்ஆயிரக்கணக்கான பேர் குவிந்ததால் அங்கு பெரும் நெரிசல் ஏற்பட்டது. அதிகாலை 4 மணியிலிருந்தே மக்கள் கூடிவிட்டதால் வரிசையில் நிற்க வைக்கப்பட்டனர்.

இந்த நிலையில், காலை 5 மணிக்கு பள்ளிக் காவலாளி நுழைவாயிலைத் திறந்து விட்டார். இதையடுத்து அத்தனை பேரும்திமுதிமுவென உள்ளே புகுந்தனர். இதில் நெரிசலில் சிக்கி பலர் கீழே விழுந்தனர். அவர்களை மிதித்துக் கொண்டுமற்றவர்கள் உள்ளே ஓடினர்.

இதில் நெரிசலில் சிக்கி கனியம்மாள் என்கிற 65 வயது பெண் பரிதாபமாக பலியானார். 13 பேர்படுகாயமடைந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக ஆலங்குளம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+