பிரசாத்திடம் மீண்டும் போலீஸ் விசாரணை

Subscribe to Oneindia Tamil

சென்னை:கன்னட பிரசாத்தை நாளை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க சென்னை மத்திய குற்றப் பிரிவு போலீஸார் திட்டமிட்டுள்ளனர்.

மாபெரும் விபச்சாரப் புரோக்கர் கன்னட பிரசாத் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். முதலில் அவர் மீது 2 வழக்குகள்போடப்பட்டன. அதில் ஒரு நாள் போலீஸ் காவலில் எடுத்து அவரை போலீஸார் விசாரித்துள்ளனர்.

இந்த நிலையில் நேற்று மேலும் 3 வழக்குகளில் பிரசாத் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். தற்போது இந்த 3வழக்குகளிலும் பிரசாத்தை காவலில் எடுத்த மத்திய குற்றப் பிரிவு போலீஸார் திட்டமிட்டுள்ளனர்.

இதுதொடர்பான மனுக்கள் நாளை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படுகின்றன. ஒரு வார காலத்திற்கு பிரசாத்தை காவலில் எடுக்க போலீஸார்திட்டமிட்டுள்ளனர்.

மேலும், அவரை பல்வேறு ஊர்களுக்கும் கூட்டிச் சென்று விசாரணை நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. குறிப்பாக புதுச்சேரிக்கு பிரசாத்தைபோலீஸார் அழைத்துச் சென்று, அங்கு பிரசாத் தொடர்ந்து விபச்சாரத்திற்குப் பயன்படுத்தி வந்த நட்சத்திர ஹோட்டலுக்கு கூட்டிச் சென்றுவிசாரணை நடத்தப்படவுள்ளது. அந்த ஹோட்டலிலும் ரெய்டு நடத்தப்படவுள்ளது.

இதற்கிடையே, பிரசாத்தின் மனைவிகளிடமும் விசாரணை நடத்த போலீஸார் திட்டமிட்டுள்ளனர். முதல் மனைவி லதா மைசூரில் உள்ளார்.பெங்களூரில் 2வது மனைவி விமலா உள்ளார். 3வது மனைவி குசும் சிறையில் உள்ளார்.

குசுமைப் போலவே விமலாவும் பிரசாத்தின் விபச்சாரத் தொழிலுக்கு பேருதவியாக இருந்துள்ளார். நடிகைகளை விபச்சாரத்தில் ஈடுபடுத்தபிரசாத்துக்கு, விமலாதான் முழு உதவியாக இருந்துள்ளார். எனவே விமலாவிடமும் தீவிர விசாரணை நடத்தப்படவுள்ளது. அதேபோலலதாவையும் துருவித் துருவி விசாரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+