கணவரின் 2வது கல்யாணம்: மனைவி தற்கொலை

Subscribe to Oneindia Tamil

காஞ்சிபுரம்:காதலித்து மணந்த கணவரைப் பிரித்துச் சென்று அவருக்கு 2வது கல்யாணம் நடத்தி வைத்ததால் மனம் உடைந்த பெண் விஷம் அருந்தி தற்கொலைசெய்து கொண்டார்.

காஞ்சிபுரம் மாவட்டம் அச்சரப்பாக்கம் அருகே உள்ள திருமுக்காடு பகுதியைச் சேர்ந்தவர் காமாட்சி (22). இவர் சென்னையில் உள்ள ஒரு தனியார்நிறுவனத்தில் வார்டனாக வேலை பார்த்து வந்தார்.

அப்போது அவருக்கும், ஜெயராமன் (25) என்பவருக்கும் இடையே காதல் ஏற்பட்டது. இருவரும் பத்து நாட்களுக்கு முன்பு திருப்பதியில்கல்யாணம் செய்து கொண்டனர். ஆனால் இந்தக் கல்யாணத்தை ஜெயராமன் ஏற்கவில்லை.

சென்னைக்கு வந்த அவர்கள், ஜெயராமனை மட்டும் தங்களுடன் அழைத்துச் சென்று விட்டனர். இதனால் அதிர்ச்சி அடைந்த காமாட்சி இதுகுறித்துபோலீஸில் புகார் கொடுத்தார்.

போலீஸார் ஜெயராமனின் பெற்றோரை வரவழைத்து விசாரணை நடத்தினர். அப்போது, இன்னும் சில நாட்களில் முறைப்படி ஜெயராமனுக்கும்,காமாட்சிக்கும் கல்யாணம் செய்து வைப்பதாக போலீஸாரிடம் ஜெயராமனின் பெற்றோர் உறுதியளித்தனர்.

ஆனால் அதற்கு மாறாக, ஜெயராமனுக்கு இன்னொரு பெண்ணைப் பார்த்து கல்யாணம் செய்து வைத்து விட்டார்கள். இது காமாட்சிக்குத் தெரியவர அவர் அதிர்ச்சி அடைந்தார்.

மனம் உடைந்த அவர் விஷம் சாப்பிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+