வெங்கடாசலபதிக்கு ரூ. 50 லட்சத்தில் வைர பூணூல்
திருச்சி:திருப்பதி வெங்கடாசலபதிக்கு திருச்சி ஸ்ரீரங்கம் நாராயண ஜீயர் மடம் சார்பில் ரூ. 50 லட்சம் மதிப்பிலான வைர பூணூல் அணிவிக்கப்படவுள்ளது.
ஸ்ரீரங்கம் ஸ்ரீநாராயண ஜீயர் சுவாமிகள் மடம் சார்பில், திருப்பதி வெங்கடாசலபதிக்கு பிரமாண்ட வைர பூணூல் அணிவிக்க முடிவுசெய்யப்பட்டது. இதையடுத்து ரூ. 50 லட்சம் செலவில் இந்தப் பூணூல் உருவாக்கப்பட்டுள்ளது. இந்தப் பூணூல் 6ம் தேதி பெருமாளுக்குஅணிவிக்கப்படவுள்ளது.
இந்தப் பூணூல் தயாரிக்கத் தேவையான வைரத்தை ஜீயரின் சீடரான திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறைச் சேர்ந்த மோகன்ராஜ் என்பவர்தானமாக தந்துள்ளார். அதன் பின்னர் திருப்பதி தேவஸ்தானத்தின் அனுமதியைப் பெற்று பூணூல்தயாரிப்புப் பணி சென்னையில் தொடங்கி முடிவடைந்தது.
மொத்தம் 6 வரிசைகளில் 6 அடி நீளத்தில், 3.25 கிலோ தங்கத்தில், 450 வைரக் கற்களுடன் இந்த பூணூல் தயாரிக்கப்பட்டுள்ளது. மிகவும்நுணுக்கமான வேலைப்பாடுகளுடன் கூடியதாக தயாரிக்கப்பட்டுள்ள இந்தப் பூணூல் தற்போதுஜீயர் மடத்திற்குக் கொண்டு வரப்பட்டுள்ளது.
இந்தப் பூணூலுடன் பத்மாவதி தாயாருக்கு சாற்றுவதற்காக பட்டுப் புடவைகளும் அனுப்பப்படவுள்ளன. பலத்த போலீஸ் பாதுகாப்புடன் மடத்தில்வைக்கப்பட்டுள்ள வைரப் பூணூலை பக்தர்கள் பலர் பார்வையிட்டு வணங்கினர்.
6ம் தேதி காலை பூணூல் பெருமாளுக்கு அணிவிக்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications