மனைவிகளை அடிப்பதில் பீகார் ஃபர்ஸ்ட்தென்னிந்தியாவில் தமிழகம் சூப்பர் ஃபாஸ்ட்

Subscribe to Oneindia Tamil

சென்னை:இந்தியாவிலேயே பெண்கள் மீதான குடும்ப வன்முறை அதிகம் நடக்கும் மாநிலமாக பீகார் திகழ்கிறது. தமிழகம் 7வது இடத்தில் உள்ளது. ஆனால்தென்னிந்தியாவில் தமிழகம்தான் குடும்ப வன்முறையில் முதலிடத்தில் உள்ளது.

தேசிய குடும்ப நல ஆய்வில் இது தெரிய வந்துள்ளது. நாடு முழுவதும் நடத்தப்பட்ட ஆய்வின் முடிவுகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன.அதன்படி நாட்டிலேயே குடும்ப வன்முறை அதிகம் நடைபெறும் மாநிலமாக பீகார் விளங்குகிறது.

பீகாரில் உள்ள பாதிக்கும் மேற்பட்ட இல்லத்தரசிகள், கணவர்களிடம் அடி வாங்குபவர்களாக உள்ளனர். மனைவிகளை அடிப்பவர்களின்எண்ணிக்கை பீகாரில் 59 சதவீதமாக உள்ளது.

இதற்கு அடுத்து ராஜஸ்தான் (46.3), மத்திய பிரததேசம் (45.8). திரிபுரா (44.1), மணிப்பூர் (43.9), உத்தரப் பிரதேசம் (42.4), தமிழ்நாடு (41.9),மேற்கு வங்கம் (40.3) ஆகிய மாநிலங்கள் உள்ளன. கடைசி இடத்தில் கேரளா உள்ளது.

அதேசமயம், தென்னிந்தியாவில் குடும்ப வன்முறை அதிகமாக நடக்கும் மாநிலமாக தமிழகம் விளங்குகிறது. தமிழக நகர்ப்புறங்களை விட கிராமப்பகுதிகளில்தான் குடும்பத்தில் பெண்களுக்கு அதிக அடி, உதை கிடைக்கிறதாம்.

தமிழக நகர்ப்புறங்களில் 39 சதவீத திருமணமான பெண்கள் கணவர்களிடம் சிக்கி அவதியுறுகின்றனர். அதுபோல கிராமப்புறங்களில் 44சதவீதமாக உள்ளது.

ஆந்திராவில், ஆண்களிடம் சிக்கி அவதியுறும் குடும்பப் பெண்களின் எண்ணிக்கை 35.2 சதவீதமாக உள்ளது. கர்நாடகத்தில் 20 சதவீதமாகவும்,கேரளாவில் 16.4 சதவீதமாகவும் இது உள்ளது.

இதேபோல சென்னை நகரில் கணவர்களிடம் சிக்கி கஷ்டப்படும் பெண்களின் எண்ணிக்கை 40.6 சதவீதமாக உள்ளது.

இந்த ஆய்வில் தெரிய வந்துள்ள இன்னொரு முக்கிய விஷயம், படித்தவர்களாக இருந்தாலும் சரி, இல்லாதவர்களாக இருந்தாலும் சரி,பெண்களுக்கு ஆண்களால் ஏற்படும் கஷ்டங்களில் பாரபட்சமே இல்லை என்பதுதான்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+