வங்கதேசம்: தீயில் கருகி 21 பேர் பலி
Subscribe to Oneindia Tamil
டாக்கா:வங்கதேசத்தின் சிட்டகாங் நகரில் நடந்த பயங்கர தீவிபத்தில் பெண்கள், குழந்தைகள் உள்பட 21 பேர் பரிதாபமாக கருகி பலியாயினர்.
வங்கதேசத்தின் தென் மேற்கு நகரம் சிட்டகாங். இங்கு நேற்று அதிகாலை துணிகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்த ஒரு குடவுனில் பயங்கர தீவிபத்து ஏற்பட்டது.
இங்கு பிடித்த தீ அருகில் இருந்த குடிசைப் பகுதிகளுக்குப் பரவியது. இதில் குடிசையில் இருந்த 21 பேர் உடல் கருகி பலியாயினர். இறந்தவர்களில் பெரும்பான்மையானோர் பெண்களும், குழந்தைகளும் ஆவர்.
அதிகாலை நேரம் என்பதால் அனைவரும் தூங்கிக் கொண்டிருந்தனர். தீவிபத்தில் 10 சிறார்களும், எட்டு பெண்களும் இறந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications