தமிழக-கர்நாடக எம்.பிக்கள் அமளிகெளடாவுக்கு சபாநாயகர் கண்டிப்பு

Subscribe to Oneindia Tamil

டெல்லி:காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பு குறித்து முன்னாள் பிரதமர் தேவே கெளடா மக்களவையில் சில கருத்துக்களைக் கூறியதற்கு தமிழகத்தைச் சேர்ந்தஎம்.பிக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து குரல் எழுப்பியதால் மக்களவையில் பெரும் அமளி நிலவியது. கெளடாவின் பேச்சுக்கு சபாநாயகர் கண்டனம்தெரிவித்தார்.

மக்களவையில் இன்று கெளடா பேசுகையில், காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பு தொடர்பாக மக்களவையின் 193வது விதியின் கீழ் விவாதம் நடத்தசபாநாயகர் அனுமதிக வேண்டும் என்றார்.

இதற்கு திமுக கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்த தமிழக எம்.பிக்கள் கடும் ஆட்சேபம் தெரிவித்து குரல் எழுப்பினர். தமிழகத்தைச் சேர்ந்த அத்தைனஎம்.பிக்களும் எழுந்து கெளடாவைக் கண்டித்து கடுமையாக குரல் எழுப்பினர்.

இதனால் அவையில் பெரும் அமளி ஏற்பட்டது. தமிழக எம்.பிக்களை அமர வைக்க நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரியரஞ்சன் தாஸ்முன்ஷியும், தமிழக மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலுவும் முயன்றனர். ஆனால் தமிழக எம்.பிக்கள் தொடர்ந்து ஆவேசமாக பேசினர்.

கெளடாவுக்கு ஆதரவாக கர்நாடக எம்.பிக்களும் உரத்த குரலில் பேசினர். இதனால் சில நிமிடங்களுக்கு யார் என்ன பேசுகிறார்கள் என்பதேதெரியாத அளவுக்கு பெரும் அமளியும், கூச்சல், குழப்பமும் நிலவியது.

உறுப்பினர்களை அமைதிப்படுத்த முயன்று தோல்வியுற்ற சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜி கோபமடைந்து, உறுப்பினர்களின் செய்கை மிகவும்மோசமாக உள்ளது. நாம் ஜனநாயகத்திற்குப் பொருத்தம் இல்லாதவர்கள் எனத் தெரிகிறது.

கெளடாவின் கோரிக்கையை நான் நிராகரிக்கவில்லை. காவிரிப் பிரச்சினை தொடர்பாக விவாதிக்க நான் நேரம் ஒதுக்குவேன் என்றுதான்கூறுகிறேன்.

விவாதமே கூடாது என்று நான் கூறவில்லை. ஆனால் இப்படிக் குழப்பம் செய்தால் நான் எப்படி அதை அனுமதிக்க முடியும்?

என்னை கெளடா சந்தித்தபோது அவரிடம் விவாதத்திற்கு வாய்ப்பளிக்கிறேன், வழக்கமான விவாதங்கள் முடிந்த பின்னர் இந்தப் பிரச்சினைதொடர்பாக பேசலாம் என்றுதான் கூறினேன். ஆனால் கெளடா இப்போது இந்தப் பிரச்சினையை எழுப்பியது தவறு.

என்னை நேற்று கெளடா சந்தித்தபோது, காவிரிப் பிரச்சினை தொடர்பாக பிரதமர் பதிலுரைக்குப் பின்னர் கடைசியாகப் பேசலாம் என்று கூறினேன்.அவரும் அதற்கு ஒத்துக் கொண்டார். ஆனால் இப்போது பிரச்சினையை ஆரம்பித்திருப்பது துரதிர்ஷ்டவசமானது என்று கடுமையாகக் கூறினார்சோம்நாத் சாட்டர்ஜி.

முன்னதாக கெளடா பேசுகையில், நான் காவிரிப் பிரச்சினை குறித்து பேச எழவில்லை. அவையின் நடவடிக்கையைக் குலைக்கவும் விரும்பவில்லை.இருப்பினும், இந்தப் பிரச்சினை தொடர்பாக 15 நிமிடங்கள் மட்டும் பேச எனக்கு அனுமதிக்க வேண்டும் என்றார். இதுதான் தமிழக எம்.பிக்களைகோபப்படுத்தியது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+