கேரளாவில் பந்த்: தமிழக வாகனங்கள் நிறுத்தம்
கம்பம்:கேரளாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒரு பிரிவு நடத்தும் முழு அடைப்புப் போராட்டத்தையடுத்து தமிழகத்திலிருந்து கேரளாவுக்குவாகனப் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ரெட் பிளாக் பி>வு சார்பில் இன்று காலை 6 மணி முதல் மாலை 6 மணிவரை பந்த் நடத்தப்படுகிறது. இதனால் கேரளாவின் பல பகுதிகளில் வாகனங்கள் ஓடவில்லை.
பந்த் காரணமாக, தமிழகத்திலிருந்தும் கேரளாவுக்கு வாகனங்கள் செல்லவில்லை. தென்கோடி பகுதி எல்லையான களியக்காவிளையுடன்வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளன.
இதேபோல தேனி மாவட்ட கேரள எல்லைப் பகுதிகளிலும் தமிழக வாகனங்கள் செல்லாமல் நிறுத்தப்பட்டுள்ளன. குமுளிக்கு மட்டும் கம்பம் மெட்டுவழியாக வாகனங்கள் செல்கின்றன.
வாகனங்கள் அனைத்தும் கம்பம், கூடலூருடன் நிறுத்தப்பட்டுள்ளன. இதனால் தமிழகத்திலிருந்து கேரளாவில் உள்ள தோட்டங்களுக்கு வேலைக்குச்செல்வோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள், கூடலூரில் தேங்கிக் கிடக்கின்றன.












Click it and Unblock the Notifications