400 வயது குரானை விற்க முயன்றவர் கைது
பெங்களூர்:ஒளரங்கசீப் காலத்து, 400 ஆண்டு பழமையான திருக்குரானை விற்க முயன்ற நபரை பெங்களூர் போலீஸார் கைது செய்தனர்.
பெங்களூர், எம்.ஜி. சாலையில் உள்ள ஒரு ஹோட்டலில் பழமை வாய்ந்த பொருட்களை விற்க முயற்சி நடப்பதாக போலீஸாருக்குத் தகவல்கிடைத்தது.
இதையடுத்து நகர குற்றத் தடுப்புப் பிரிவு போலீஸார் அங்கு விரைந்தனர். அப்போது அந்த ஹோட்டல் முன்பு நின்று கொண்டிருந்த கேரள மாநிலம்திருச்சூரைச் சேர்ந்த சுகுமார் என்பவர் சந்தேகத்திற்கிடமான வகையில் தெரிந்ததால் அவரைப் பிடித்து விசாரித்தனர்.
விசாரணையில் அவரிடமிருந்து 400 ஆண்டு கால பழமை வாய்ந்த திருக்குரான், தஞ்சை மகாராஜா சரபோஜி வரைந்த ஓவியம் ஆகியவை பறிமுதல்செய்யப்பட்டன.
இந்த திருக்குரான் முகலாய மன்னர் ஒளரங்கசீப் காலத்தைச் சேர்ந்தது. அவரது கையொப்பமும் இந்த குரானில் உள்ளது. மொத்தம் 15 கிலோ, 39.9செமீ நீளம், 20 செமீ அகலம் கொண்ட இந்த குரான் நூல், மலர்களின் வாசனையுடன், எளிதில் தீப்பிடிக்காத வண்ணம் நுட்பமாகதயாரிக்கப்பட்டதாகும்.
இந்த குரானின் சர்வதேச மதிப்பு ரூ. 5 கோடியாகும். அதேபோல தஞ்சாவூர் ஓவியத்தின் மதிப்பு ரூ. 10 லட்சமாகும். சுகுமாரைக் கைது செய்தபோலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications